- க. சுமதி
சென்னை: உலக மக்கள் அனைவரும் அவரவர்கள் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் உலக பாரம்பரிய வாரம் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல முன்னெடுப்புகளையும் அது மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய தொன்மை வரலாறு கொண்ட சுற்றுலாத் தலங்களில் இதுதொடர்பான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியத்தின் தொன்மையையும், மேம்பட்ட நாகரிகத்தையும் பறைசாற்றும் வகையில் கீழடியில் ஒரு அருங்காட்சியகம்
அமைந்துள்ளது. இங்கு தமிழர் நாகரிகத்தின் சான்றுகளாக கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் காணொளி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுகிறது. பெரியோர்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் ஆர்வத்துடன் அருங்காட்சியக பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர்.
இது பற்றி கல்லூரி மாணவர்கள் கூறுகையில் காணொளிகள் மிகவும் விளக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த காணொளிகளை பார்த்தாலே போதும் , யாருடைய உதவியும் இன்றி கீழடி பொருட்களை பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளிகள் மிகவும் உதவியாக உள்ளது என்றும் கூறினர்.
இதேபோல, தமிழர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் சிற்பங்கள். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரைச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்வையிடுவதற்கு நமது சுற்றுலாத்துறை ஆவண செய்துள்ளது.
கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம் முதலான அரியவகை சிற்பங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.
(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}