- க. சுமதி
சென்னை: உலக மக்கள் அனைவரும் அவரவர்கள் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் உலக பாரம்பரிய வாரம் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல முன்னெடுப்புகளையும் அது மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய தொன்மை வரலாறு கொண்ட சுற்றுலாத் தலங்களில் இதுதொடர்பான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியத்தின் தொன்மையையும், மேம்பட்ட நாகரிகத்தையும் பறைசாற்றும் வகையில் கீழடியில் ஒரு அருங்காட்சியகம்
அமைந்துள்ளது. இங்கு தமிழர் நாகரிகத்தின் சான்றுகளாக கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் காணொளி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுகிறது. பெரியோர்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் ஆர்வத்துடன் அருங்காட்சியக பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர்.
இது பற்றி கல்லூரி மாணவர்கள் கூறுகையில் காணொளிகள் மிகவும் விளக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த காணொளிகளை பார்த்தாலே போதும் , யாருடைய உதவியும் இன்றி கீழடி பொருட்களை பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளிகள் மிகவும் உதவியாக உள்ளது என்றும் கூறினர்.
இதேபோல, தமிழர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் சிற்பங்கள். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரைச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்வையிடுவதற்கு நமது சுற்றுலாத்துறை ஆவண செய்துள்ளது.
கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம் முதலான அரியவகை சிற்பங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.
(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}