சித்திரை திருமகளே வருக..!!

Apr 14, 2025,11:07 AM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


சித்திரை திருமகளே வருக ..!!

சீர்மிகு  வாழ்வைத் தருக ..!!

சீரிய பணிகள் சிறக்க .!!

சிறப்புற ஆசிகள் தருக. .!!


சித்திரைத் திருமகளே  நீ..!!


வசந்த கால வாசலிலே...

வர்ணங்களின் கோலம் நீ ..!!

பூத்துக் குலுங்கும் பூக்களின்

பூலோக அரசி நீ ..!!


சித்திரை மகள் முத்திரை பதிக்க,

தமிழ் புத்தாண்டாக ,

தவழ்ந்து வருகிறாள்..!!


பங்குனி திங்களுக்கு ,

விடை கொடுத்து...

 பவளவாய் திறந்து,  

மகிழ்ந்து வருகிறாள்..!!




சுடர்  விடும் சூரியனும்,  

மணம் வீசும் மலர்களும்,

மகிழ்வோடு   உன்னை ...

வரவேற்கும் போது,


மங்கல மேளம் கொட்ட , 

நாமும் சித்திரை திருமகளை ...

சிறப்போடு வரவேற்போம்.

மகிழ்வோடு கொண்டாடுவோம்.


சித்திரை மகளே..!!

உலகின் உயிர்கள் உய்ய , 

உழவன் வாழ்வு உயர , 

உடனே மழையைத் தருக..!!


உன் நல் வரவால் ,

வேப்ப மரங்கள் பூத்து குலுங்கும்.

மாமரங்கள்  காய்த்து தொங்கும்.


உன்  சீர்மிகு வருகையால் ..!!


மதுரையில்  சித்திரை திருவிழா,

மகிழ்வோடு  நடக்குமன்றோ..!!

மதுரை  மீனாட்சியின்  திருக்கல்யாணம் ,

சீரும் சிறப்புமாய்  நிகழுமன்றோ..!!


சித்திரையில்,

அழகர் ஆற்றில் இறங்கும் ,

அழகு நிகழ்வினை காண ...

ஆயிரம் கண்கள் போதுமோ..!!


என்றும் உன் வரவால் 

மகிழ்ச்சியே  பொங்கட்டும்..!!!

ஏற்றம் மிகு இத் திரு  நாட்டில் ..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்