சித்திரை திருமகளே வருக..!!

Apr 14, 2025,11:07 AM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


சித்திரை திருமகளே வருக ..!!

சீர்மிகு  வாழ்வைத் தருக ..!!

சீரிய பணிகள் சிறக்க .!!

சிறப்புற ஆசிகள் தருக. .!!


சித்திரைத் திருமகளே  நீ..!!


வசந்த கால வாசலிலே...

வர்ணங்களின் கோலம் நீ ..!!

பூத்துக் குலுங்கும் பூக்களின்

பூலோக அரசி நீ ..!!


சித்திரை மகள் முத்திரை பதிக்க,

தமிழ் புத்தாண்டாக ,

தவழ்ந்து வருகிறாள்..!!


பங்குனி திங்களுக்கு ,

விடை கொடுத்து...

 பவளவாய் திறந்து,  

மகிழ்ந்து வருகிறாள்..!!




சுடர்  விடும் சூரியனும்,  

மணம் வீசும் மலர்களும்,

மகிழ்வோடு   உன்னை ...

வரவேற்கும் போது,


மங்கல மேளம் கொட்ட , 

நாமும் சித்திரை திருமகளை ...

சிறப்போடு வரவேற்போம்.

மகிழ்வோடு கொண்டாடுவோம்.


சித்திரை மகளே..!!

உலகின் உயிர்கள் உய்ய , 

உழவன் வாழ்வு உயர , 

உடனே மழையைத் தருக..!!


உன் நல் வரவால் ,

வேப்ப மரங்கள் பூத்து குலுங்கும்.

மாமரங்கள்  காய்த்து தொங்கும்.


உன்  சீர்மிகு வருகையால் ..!!


மதுரையில்  சித்திரை திருவிழா,

மகிழ்வோடு  நடக்குமன்றோ..!!

மதுரை  மீனாட்சியின்  திருக்கல்யாணம் ,

சீரும் சிறப்புமாய்  நிகழுமன்றோ..!!


சித்திரையில்,

அழகர் ஆற்றில் இறங்கும் ,

அழகு நிகழ்வினை காண ...

ஆயிரம் கண்கள் போதுமோ..!!


என்றும் உன் வரவால் 

மகிழ்ச்சியே  பொங்கட்டும்..!!!

ஏற்றம் மிகு இத் திரு  நாட்டில் ..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்