சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபாக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல்வர் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடு நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனை அடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த, ஏற்கனவே வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள பதிவுகள் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}