சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபாக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல்வர் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடு நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனை அடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த, ஏற்கனவே வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள பதிவுகள் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}