சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபாக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல்வர் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடு நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனை அடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த, ஏற்கனவே வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள பதிவுகள் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}