ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

Feb 05, 2025,10:29 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9:00 மணி நிலவரப்படி 10.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானது. இதனை அடுத்து அத்தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, 44 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர். அதிமுக,பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.


இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம்  2, 27,237பேர் வாக்களிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது.  இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில் அறிவித்தபடியே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று  தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 


மக்களோடு மக்களாக வரிசையில் நின்று அம்மாவட்ட கலெக்டர் ராஜகோபாலன் வாக்களித்தார்.  சூரம்பட்டி வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்களித்தார்.


காலை 9:00 மணி நிலவரப்படி தற்போது 10.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 


இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


டெல்லியிலும் விறுவிறு வாக்குப் பதிவு


டெல்லி சட்டசபைக்கும் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேர்தலில் பங்கேற்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்