வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

Mar 05, 2025,05:37 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும்  மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகாலையில் லேசான பொழிவு இருந்தாலும் கூட மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவலால் இனி வரும் நாட்களில் வெப்ப அலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தற்போது வெயில் தலைக்காட்ட துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா எனவும்  மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வருகிறது. 



சென்னைக்கு குடிநீர்ப் பிரச்சினை வராது

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.618 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரம்:

பூண்டி நீர்த்தேக்கம்:

35 அடி (3231 மில்லியன் கன அடி) கொள்ளளவான பூண்டி ஏரியில் தற்போது 87.34 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம்:

24 அடி (3645 மில்லியன் கன அடி) மொத்த கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 91.08 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது.

புழல் அல்லது செங்குன்றம்:

மொத்த கொள்ளளவான 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)  கொண்ட புழல் ஏரியில் தற்போது 87.94 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சோழவரம்:

மொத்த கொள்ளளவான 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 12.86 சதவிகிதமாக உள்ளது. 

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 

மொத்த கொள்ளளவான 36.61 அடி (500 மில்லியன் கன அடி) கொண்ட கண்ணன் கோட்டை ஏரியில் தற்போது நீர் இருப்பு 87 சதவீதமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்