சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 40198 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததினால், 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பருவ மழை சற்று குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததினால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்பின்னர் மீண்டும் கர்நாடகவில் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்ததால், இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அடியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 120.41 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயர்ந்ததினால், பவர் ஹவுஸ், 16 கண் பாலம், கால்வாய் ஆகியவற்றின் வழியாக அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}