சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 40198 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததினால், 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பருவ மழை சற்று குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததினால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்பின்னர் மீண்டும் கர்நாடகவில் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்ததால், இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அடியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 120.41 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயர்ந்ததினால், பவர் ஹவுஸ், 16 கண் பாலம், கால்வாய் ஆகியவற்றின் வழியாக அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}