மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு.. விநாடிக்கு 40198 கன அடியாக அதிகரிப்பு

Aug 13, 2024,04:05 PM IST

சேலம்:   மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 40198  கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததினால், 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பருவ மழை சற்று குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததினால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.




இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக காவிரியில்   இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்பின்னர் மீண்டும் கர்நாடகவில் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்ததால், இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.


மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அடியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 120.41 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயர்ந்ததினால், பவர் ஹவுஸ், 16 கண் பாலம், கால்வாய் ஆகியவற்றின் வழியாக அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள  அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்