சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 40198 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததினால், 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பருவ மழை சற்று குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததினால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்பின்னர் மீண்டும் கர்நாடகவில் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்ததால், இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அடியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 120.41 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயர்ந்ததினால், பவர் ஹவுஸ், 16 கண் பாலம், கால்வாய் ஆகியவற்றின் வழியாக அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}