சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட அனைத்துத் தலைவர்களும் ஆவலாக காத்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்து விட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரை வெளியான பெரும்பாலான எக்சிட் போல்களில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவற்றை முற்றாக நிராகரித்து விட்டனர் இந்தியா கூட்டணியின் தலைவர்கள். மேலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தங்களது வெற்றி உறுதி என்றும் அவர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். உற்சாகமாகவும் உள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், வெற்றியைக் கொண்டாட காத்திருப்பதாக இன்று அதிரடியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் தலைவர்கள் கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா கூட்டணியின் தலைவர்களான சோனியா காந்தி, அன்புத் தம்பி ராகுல் காந்தி, மதிப்புக்குரிய பரூக் அப்துல்லா, தோழர்கள் சீதாராம் எச்சூரி, டி. ராஜா ஆகியோர் டெல்லியில் முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த குழுமியிருந்தனர். அவரை ஒரு பிராந்திய தலைவராக இல்லாமல், தேசிய தலைவராக நாம் பார்க்கிறோம் என்பது பெருமைக்குரியதாகும்.
ஜனநாயகத்தையும், கூட்டாட்சியின் மகத்துவத்தையும் காக்க தொடர்ந்து குரல் கொடுத்தவர் கலைஞர். தேசத்தை கட்டியமைப்பதில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. கடும் இக்கட்டான சூழலிலும் கூட மத்தியில் ஆதரவு கொடுத்து நிலையான ஆட்சி நடத்த உதவியவர்.
பிரதமர்களையும், குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். நாட்டின் அரசியல் முகத்தையே மாற்றியமைத்தவர். அவரது பிறந்தநாளான இன்று அதே வேகத்தோடும், வீரியத்தோடும், ஜூன் 4ம் தேதி இந்திய மக்களின் வெற்றியை, இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
வெற்றி உறுதி என்பது போலவே இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து உத்வேகத்துடன் பேசி வருவதால் பாஜக வட்டாரமும் சற்று கலக்கத்துடனேயே அனைத்தையும் பார்த்து வருகிறது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}