சென்னை IMD வானிலை முன்னறிவிப்புகள் இனி மும்மொழியில்.. இந்தியும் இடம் பெற்றது!

Mar 27, 2025,06:34 PM IST

சென்னை: தமிழக வானிலை முன்னறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை  தொடர்ந்து ஹிந்தி மொழியும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் சென்னை வானிலை ஆய்வு மையம்  இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு,புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளின் தினசரி வானிலை நிலவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுவது வழக்கம். இதற்கான  அதிகாரப்பூர்வ தனி இணையமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து வருகின்றனர்.




அந்த வரிசையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை  வானிலை இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தி அறிக்கையும் சேர்த்துள்ளது.


மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்பிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வானிலை முன்னறிவிப்பில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சு. வெங்கடேசன் கண்டனம்


இது குறித்து எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.


தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.


பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு


தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் இதை எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. 


சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது. 


இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்