- கலைவாணி ராமு
வருக வருக
தை மகளே வருக ......
தருக தருக
தனங்கள் பல தருக.....
உயர்க உயர்க
உழவர் பெருமை உயர்க....
மணக்க மணக்க
பொங்கல் வாசம் மணக்க..
தை
பிறந்ததால் தரித்திரம் போகும்....
சிறப்புகள் கூடும்....
ஆனந்தத்...தை ஆரோக்கியத்....தை
நேசத்....தை
கூட்டி

வஞ்சத்...தை துரோகத்...தை வன்மத்...தை ஆணவத்...தை கோபத்...தை சுயநலத்...தை
கழித்து
பந்தத்...தை பாசத்...தை வளத்...தை
பெருக்கி பழையனவற்றைக்
கழித்து...
புதிய எண்ணங்களை ....
கூட்டி
தை மகளை வரவேற்போம்.....
சூரியனுக்கு ஒரு நாள் பொங்கல்.... சூரிய பொங்கல்....
உழவுக்கு உதவும் காளைக்கும் பசுவுக்கும் ஓரு பொங்கல்....
காணும் பொங்கல்.... இறைவனுக்கு நன்றி தெரிவிக்க ஒரு பொங்கல்
கொண்டாடி மகிழ்வோம் இனிமையாக பொங்கலோ....
பொங்கல்... பொங்கலோ.... பொங்கல்....
மகிழ்ச்சி பொங்கல்....
ஆனந்த பொங்கல்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
உழவே உயிர்!
நிசமான பொங்கல்!
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
{{comments.comment}}