Low pressure: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு.. டிச. 10 முதல் 4 நாள் கனமழை வாய்ப்பு

Dec 07, 2024,05:09 PM IST

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழ்நாட்டில் டிசம்பர் 10 முதல் நான்கு நாட்கள் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 


கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் ஓய்ந்துள்ளது. அதற்குள்ளாக வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே சமயத்தில் இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக 18 சதவீதம் பெய்துள்ளது. தற்போது வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்ந்து உருவானால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து மழை அதிகரிக்கும் என கூறப்பட்டது.




இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தலின்படி தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த  தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 11ஆம் தேதி வாக்கில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 10 ,11,12, மற்றும் 13 ஆகிய நான்கு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால்  தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


டிசம்பர் 10ம் தேதி கன மழை: 


மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ‌ தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் பத்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


டிசம்பர் 11ஆம் தேதி கனமழை: 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


12ஆம் தேதி மிக கனமழை:


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதுவையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


டிசம்பர் 12ஆம் தேதி கனமழை: 


காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி,  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

news

ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

news

இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

news

தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!

news

சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

news

பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?

news

மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்