- கவிஞர் சு. நாகராஜன்
வேட்டி சட்டை
மாட்டிக் கொண்டு
வீதியிலே துப்பி
எச்சில் படுத்துவார்
யார் குப்பைக்காரன்?
அவர் பெரிய படிப்பு
எல்லாம் படித்திருக்கிறார்
கடையில் பழத்தை
வாங்கி தின்றுவிட்டு
தோலை வீசி எறிகிறார்
யார் குப்பைக்காரன் ?

அளவாக வாங்கி
மீதி இல்லாமல்
சாப்பிட வேண்டும்
சாப்பிட்ட மீதியை
சரியான இடத்தில்
போடத் தெரியாத
மாந்தர் அல்லவா நீ
யார் குப்பைக்காரன் ?
பண்டிகை வந்து
கொண்டாட்டம் போட்டாய்
மறுநாள் வீதியெல்லாம்
குப்பை தான் -இங்கு
யார் குப்பைக்காரன் ?
ஓ! நான் குப்பைக்காரன்
காரணம் என்னவென்று
கேட்டேன் ?
படிக்கவில்லையாம்
படிக்கவில்லை என்றால்
உனக்கு இந்த வேலை தான்
யார் சொன்னது ?
வேலை செய்வதில்
ஏற்றத் தாழ்வா -யார்
சட்டம் இயற்றியது?
நீதான் முடி திருத்த
வேண்டுமாம்- நீ தான்
துணி துவைக்க
வேண்டுமாம்- நீ தான்
சாக்கடையை சுத்தம்
செய்ய வேண்டுமாம்
யார் இங்கு
ஆணை போட்டது ?
ஓ அதற்குத்தான் நானா?
சரி செய்கிறேன்
நாளை!
அதோ குப்பைக்காரன்
அவனைக் கூப்பிடு
அவன் யார் ?
குப்பைக்காரனின் மகன்
இவள் யார்
குப்பைக்காரனின்
மனைவி
அழகான பட்டங்கள்
என்னடா இந்த உலகம்
அசுத்தம் செய்பவன்
தானே சுத்தம்
செய்ய வேண்டும்
தவறு செய்கிறவன்
தானே தண்டனை
பெற வேண்டும்
இங்கு குப்பைகளை
வீசியது உன் தவறு
வீசிய குப்பைகளை
சுத்தம் செய்யாதது
உன் தவறு
காலையில் எழுந்து
வீட்டின் முன் நின்று
அதிகாரத்தொனியில்
ஒரு வாரமாய் குப்பை
எடுக்கவில்லை
வாடை வீசுகிறது !
இங்கே குப்பையாக்கியவன்
செய்த தவறா அல்லது
குப்பை எடுக்காமல்
சென்றது தவறா
குப்பை எடுப்பவன்
குப்பைக்காரனா
மனிதா விடையை
நீயே கூறிடு
(சு. நாகராஜன் , அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}