- ஸ்வர்ணலட்சுமி
மார்ச் 31ஆம் தேதி 2025 திங்கட்கிழமை ரமலான் பண்டிகை இஸ்லாமிய மதத்தினர் அனைவரும் கோலகலமாக கொண்டாடுகின்றனர்.
ஈத் -உல்- பித்ர் ,புனித ரமலான் மாதத்தின் இறுதியையும் இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ஈத் -உல் -பித்ர் முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பு நாள்.
இது உண்ணா நோன்பு, தொழுகை, ஆன்மீகப் பிரதிபலிப்பு மாதமான ரமலான் மாதத்தின் இறுதியை குறிக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் ஈத் -அல் -பித்ர் மற்றும் ஈத்- அல் -அதா ஆகிய இரண்டு ஈத் பண்டிகைகள் உள்ளன.
ரமலான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இது ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ஆகும். மற்றும் உலகம் முழுவதும் முஸ்லிம்களால் நோன்பு நோற்கப்படும் நேரம் ஆகும்.
நோன்பு நோற்பது:

பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் நேர்மையான வாழ்க்கை நடத்துவர்.
தகவல் (தகவல் உணர்வு):
பசி, தாகம் அனுபவிப்பதன் மூலம் ஏழைகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு உதவுதல். இறை வழிபாடு அதிகரித்தல்: தொழுகை, ததிக்ர் , தானம் மற்றும் பிற நல்ல செயல்களில் ஈடுபடுதல்.
நோன்பு நோற்கும் முறை:
ஸஹர்( sehr/suhur)- காலை முதல் நேரம் பகல் பஜ்ருக்கு( Fajr) முன்பு உணவு உட்கொள்ளுவது.
இப்தார் (Iftar) - சூரியன் மறைந்த உடன் நோன்பை முறித்து பேரிச்சம்பழம், தண்ணீரால் நோன்பு துறக்கப்படுகிறது .
திருக்குர்ஆன் ஓதுவது மிகவும் முக்கியமானது.
ரமலான் முக்கிய இரவுகள்:
லய் லத்துல் காதர் (Laylatul Qadr) ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு என்று கூறப்படுகிறது .இது ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒன்று.
ஈதுல் பித்ர் ( Eid - ul - Fitr)ரமலான் மாத இறுதி அன்று புதிய நிலவு காணப்பட்ட பிறகு ஈதுல் பித்ர் என்ற பெரிய பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.
தகவத்துல் கத்ர் (அருள் இரவு) ரமலானின் கடைசி பத்து நாட்களில் குறிப்பாக 27 வது இரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சகாத்தும், ஸதகாவும் ஏழை எளியவருக்கு உதவுவது மிக முக்கிய கடமையாகும்.
இன்று ரமலான் சிறப்பு தொழுகையும் ,பரஸ்பர வாழ்த்துக்களும், தர்மங்களும் வழங்கப்படும். ரமலான் மாதம் என்பது பக்தி, பொறுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான மாதமாகும் .இன்றைய நாள் ரமலான் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரமலான் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள். தெரிவிப்பது தென் தமிழ் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}