சென்னை: தமிழக அரசியலில் கனிம வளத்துறை விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. அதிலும் அந்தத் துறையை வைத்திருந்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து அது பறிக்கப்பட்டு, ரகுபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்தாலும், சட்டசபையில் அவருக்கு 10-வது இடம்தான். மூத்த அமைச்சர்களுக்கு இடையே 8 இடங்கள் உள்ளன. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை கவனித்து வந்தார். தற்போது அவரிடமிருந்து அந்தத் துறை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கனிம வளக்கொள்ளை குற்றச்சாட்டு, எம்.சாண்ட் மற்றும் ஆற்று மணல் விலை உயர்வு புகார், அமலாக்கத் துறையின் (ED) தலையீடு போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரான துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருக்கிறார். சட்டசபையில் அவருக்கு 2-வது இடம். தமிழகத்தில் கனிம வளக்கொள்ளை பல வருடங்களாக நடந்து வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று குற்றச்சாட்டு உள்ளது.
சட்டசபையில் இந்த பிரச்சினை அடிக்கடி எதிரொலிக்கும். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இதைப் பற்றி பேசினார். "தென்காசி, கன்னியாகுமரி, கோவை பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் கனிம வளங்களுடன் அண்டை மாநிலத்துக்கு போகின்றன. மக்களும் போராடுகிறார்கள். கனிம வளங்களை அரசு காப்பாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.
அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கும்போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் லாரிகள் போவது போல உறுப்பினர் பேசுகிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இப்படித்தான் நடந்தது" என்று அவர் சொன்னார். அதாவது, அ.தி.மு.க. ஆட்சியிலும் இது நடந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் எம்.சாண்ட், ஆற்று மணல் விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. போராட்டங்களும் நடந்தன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மணல் விலையை ரூ.1000 வரை குறைத்தது. ஆனாலும், பிரச்சினை முடியவில்லை.
இந்த நிலையில், கனிம வள பிரச்சினையில் ED தலையிடுவதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இது கெட்ட பெயரை உண்டாக்கும் என்று தி.மு.க. அரசு நினைத்தது. அதனால், துரைமுருகனிடம் இருந்த கனிமவளத் துறை திரும்பப் பெறப்பட்டு சட்டத் துறை கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் நீண்ட காலமாக நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கனிம வளத்துறை மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கனிம வளக்கொள்ளை குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}