அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?

May 08, 2025,04:56 PM IST

சென்னை: தமிழக அரசியலில் கனிம வளத்துறை விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. அதிலும் அந்தத் துறையை வைத்திருந்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து அது பறிக்கப்பட்டு, ரகுபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்தாலும், சட்டசபையில் அவருக்கு 10-வது இடம்தான். மூத்த அமைச்சர்களுக்கு இடையே 8 இடங்கள் உள்ளன. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை கவனித்து வந்தார். தற்போது அவரிடமிருந்து அந்தத் துறை திரும்பப் பெறப்பட்டுள்ளது.


கனிம வளக்கொள்ளை குற்றச்சாட்டு, எம்.சாண்ட் மற்றும் ஆற்று மணல் விலை உயர்வு புகார், அமலாக்கத் துறையின் (ED) தலையீடு போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மூத்த அமைச்சரான துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருக்கிறார். சட்டசபையில் அவருக்கு 2-வது இடம். தமிழகத்தில் கனிம வளக்கொள்ளை பல வருடங்களாக நடந்து வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று குற்றச்சாட்டு உள்ளது.


 சட்டசபையில் இந்த பிரச்சினை அடிக்கடி எதிரொலிக்கும். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இதைப் பற்றி பேசினார். "தென்காசி, கன்னியாகுமரி, கோவை பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் கனிம வளங்களுடன் அண்டை மாநிலத்துக்கு போகின்றன. மக்களும் போராடுகிறார்கள். கனிம வளங்களை அரசு காப்பாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.


அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கும்போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் லாரிகள் போவது போல உறுப்பினர் பேசுகிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இப்படித்தான் நடந்தது" என்று அவர் சொன்னார். அதாவது, அ.தி.மு.க. ஆட்சியிலும் இது நடந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 


இந்த நிலையில் தமிழகத்தில் எம்.சாண்ட், ஆற்று மணல் விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. போராட்டங்களும் நடந்தன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மணல் விலையை ரூ.1000 வரை குறைத்தது. ஆனாலும், பிரச்சினை முடியவில்லை.


இந்த நிலையில், கனிம வள பிரச்சினையில் ED தலையிடுவதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இது கெட்ட பெயரை உண்டாக்கும் என்று தி.மு.க. அரசு நினைத்தது. அதனால், துரைமுருகனிடம் இருந்த கனிமவளத் துறை திரும்பப் பெறப்பட்டு சட்டத் துறை கொடுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் துரைமுருகன் நீண்ட காலமாக நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கனிம வளத்துறை மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கனிம வளக்கொள்ளை குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்