நாம் தமிழரை கட்சியைப் போல அமமுகவும் தனித்து போட்டியா?.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு

Dec 02, 2025,06:32 PM IST

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடையாத நிலையிலேயே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளார். இதற்காக, டிசம்பர் 10 முதல் டிசம்பர் 18 வரை விருப்ப மனுக்களை விநியோகிக்கும் பணியை கட்சி தொடங்கியுள்ளது. 


இது, வேட்பாளர்களைக் கண்டறிந்து, சாதகமான தொகுதிகளை உறுதி செய்வதற்கான ஒரு முன்கூட்டிய தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.


2017-ல் தினகரனுக்கு ஆதரவாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "கூட்டணி முடிவுகளைப் பொருட்படுத்தாமல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு பேருக்கு வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் இடம் ஒதுக்க கட்சிக்குள் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.




மேலும், தினகரன், சாத்தியமான வேட்பாளர்களை உடனடியாக களப்பணியைத் தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் கூட்டணி தொகுதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்கள் இன்னும் தீராத நிலையில் தனது வேலைகளை முன்கூட்டியே தினகரன் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது. 


அதேசமயம், நாம் தமிழர் கட்சியைப் போலவே தனிப் பாதையில் நடை போட தினகரன் தீர்மானித்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. அதிலும் சரி பாதியாக ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த தேர்தலிலும் 234 வேட்பாளர்களையும் முடிவு செய்து விட்டார் சீமான். வருகிற பிப்ரவரி மாதம் அத்தனை பேரையும் ஒரே மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.


இந்த நிலையில் அமமுகவும் நாம் தமிழர் கட்சி பாணியில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்