சென்னை: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 -25 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பின் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல, புதுச்சேரியில் கே.கைலாஷ்நாதன், தெலங்கானா மாநிலத்தில் ஜிஷ்னு தேவ் சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தோஷ் கங்க்வார், ராஜஸ்தானில் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் தேகா, பஞ்சாப் மாநிலத்தில் குலாம் சந்த் கட்டாரியா, சிக்கிம் மாநிலத்தில் ஓம் பிரகாஷ் மாத்தூர், அசாம் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, மேகாலயாவில் விஜயசங்கர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவியின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடரக் கூடும் என்ற பேச்சு உள்ளது. அதேசமயம், அவர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்பதில் இதுவரை தெளிவு இல்லை. சமீப காலமாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எந்த உரசலும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் புதிய ஆளுநர் வர வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.
எது எப்படி இருந்தாலும் 31ம் தேதியுடன் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதால், அதற்குள் ஆளுநர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் வருவாரா என்பது தெரிந்து விடும்.
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}