சென்னை: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 -25 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பின் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல, புதுச்சேரியில் கே.கைலாஷ்நாதன், தெலங்கானா மாநிலத்தில் ஜிஷ்னு தேவ் சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தோஷ் கங்க்வார், ராஜஸ்தானில் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் தேகா, பஞ்சாப் மாநிலத்தில் குலாம் சந்த் கட்டாரியா, சிக்கிம் மாநிலத்தில் ஓம் பிரகாஷ் மாத்தூர், அசாம் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, மேகாலயாவில் விஜயசங்கர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவியின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடரக் கூடும் என்ற பேச்சு உள்ளது. அதேசமயம், அவர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்பதில் இதுவரை தெளிவு இல்லை. சமீப காலமாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எந்த உரசலும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் புதிய ஆளுநர் வர வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.
எது எப்படி இருந்தாலும் 31ம் தேதியுடன் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதால், அதற்குள் ஆளுநர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் வருவாரா என்பது தெரிந்து விடும்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}