கோபிசெட்டிபாளையம் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இபிஎஸ்.,க்கு எதிராக விரைவில் வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இத தொடர்பாக உடனடியாக செங்கோட்டையனிடம் கருத்து கேட்ட போது, இது குறித்து நாளை விளக்கமாக பதிலளிக்கிறேன் என கூறி சென்று விட்டார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில், நான் கட்சி தலைமைக்கு கெடு விதிக்கவில்லை. பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மட்டுமே தெரிவித்தேன். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என பழனிச்சாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் பலமுறை பேசி வலியுறுத்தி உள்ளேன். அதிமுக.,விற்கு உண்மையாக உழைத்தவன் நான். தோல்வியே காணாதவர் எம்ஜிஆர். ஒருமுறை தோற்றாலும் மறு முறை வெற்றி பெறக் கூடியவர் ஜெயலலிதா. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகும் ஒருமுறை கூட தேர்தல் களத்தில் வெற்றி பெறாதவர் தான் பழனிச்சாமி.
அதிமுக பொதுச் செயலாளராக பழனிச்சாமி பதவியேற்ற பிறகு 2019, 2021, 2024 என வரிசையாக அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. பழனிச்சாமியின் போக்கு சர்வாதிகாரத்தனமானது. கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசியதற்காக அடிப்படை உறுப்பினர் தவிர மற்ற அனைத்து கட்சி பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்னை திமுக.,வின் பி டீம் என்கிறார்கள். பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். துரோகம் செய்தது யார்? எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது. விரைவில் வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிடுவேன்.
அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம். எடப்பாடி பழனிச்சாமிக்கு முன் கட்சிக்கு வந்தவன் நான். அதிமுக உடைந்து விடக் கூடாது என்பதற்காக எனக்கு வந்த இரண்டு வாய்ப்புக்களை கூட விட்டுக் கொடுத்தவன் நான். மன வேதனையில் இருக்கிறேன். அதிமுக.,வில் இருந்து என்னை நீக்கியது வேதனையாக உள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}