மாற்றுத்திறனாளி (கவிதை)

Oct 31, 2025,04:50 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!


எண்ணங்களும்.....

வண்ணங்களாய் உனது

கைகளிலே மலருதடி......!


ஸ்வரங்கள் கூட உன்னிடமே  சலங்கையிட்டு ஆடுதடி .......!


காற்றினிலே உன் குரலும் தென்றலென

வருடி விட்டு......


தேன் மழையை பொழியுதடி......!


வண்ணத்து பூச்சி போல 

எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!


கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ

கலங்கி நின்றாய்.........!




கதிரவன் உதித்தாலும்

நிலவது வளர்ந்தாலும்.....


நம்பிக்கையை

ஒளியாக்கி.......

நடையினிலே  துயில்கின்றாய்.......!


நீருக்குள் மீன்களென 

உன் வானம் மகிழுதடி.....!


வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று 

சிரிக்குதடி.....!


அவன் படைத்த உலகினிலே.....!


அனைத்துமே மாயை என.....உன் விழியை

மறைத்தானோ......???


இறைவன்...!!!



(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்