மாற்றுத்திறனாளி (கவிதை)

Oct 31, 2025,04:50 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!


எண்ணங்களும்.....

வண்ணங்களாய் உனது

கைகளிலே மலருதடி......!


ஸ்வரங்கள் கூட உன்னிடமே  சலங்கையிட்டு ஆடுதடி .......!


காற்றினிலே உன் குரலும் தென்றலென

வருடி விட்டு......


தேன் மழையை பொழியுதடி......!


வண்ணத்து பூச்சி போல 

எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!


கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ

கலங்கி நின்றாய்.........!




கதிரவன் உதித்தாலும்

நிலவது வளர்ந்தாலும்.....


நம்பிக்கையை

ஒளியாக்கி.......

நடையினிலே  துயில்கின்றாய்.......!


நீருக்குள் மீன்களென 

உன் வானம் மகிழுதடி.....!


வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று 

சிரிக்குதடி.....!


அவன் படைத்த உலகினிலே.....!


அனைத்துமே மாயை என.....உன் விழியை

மறைத்தானோ......???


இறைவன்...!!!



(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்

news

சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

news

மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

வேலின் அருளால் தைப்பூசத்தில் ஏற்படும் பலன்கள்!

news

சமாதானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்