- சிவ .ஆ.மலர்விழி ராஜா
விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!
எண்ணங்களும்.....
வண்ணங்களாய் உனது
கைகளிலே மலருதடி......!
ஸ்வரங்கள் கூட உன்னிடமே சலங்கையிட்டு ஆடுதடி .......!
காற்றினிலே உன் குரலும் தென்றலென
வருடி விட்டு......
தேன் மழையை பொழியுதடி......!
வண்ணத்து பூச்சி போல
எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!
கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ
கலங்கி நின்றாய்.........!

கதிரவன் உதித்தாலும்
நிலவது வளர்ந்தாலும்.....
நம்பிக்கையை
ஒளியாக்கி.......
நடையினிலே துயில்கின்றாய்.......!
நீருக்குள் மீன்களென
உன் வானம் மகிழுதடி.....!
வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று
சிரிக்குதடி.....!
அவன் படைத்த உலகினிலே.....!
அனைத்துமே மாயை என.....உன் விழியை
மறைத்தானோ......???
இறைவன்...!!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}