மாற்றுத்திறனாளி (கவிதை)

Oct 31, 2025,04:50 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!


எண்ணங்களும்.....

வண்ணங்களாய் உனது

கைகளிலே மலருதடி......!


ஸ்வரங்கள் கூட உன்னிடமே  சலங்கையிட்டு ஆடுதடி .......!


காற்றினிலே உன் குரலும் தென்றலென

வருடி விட்டு......


தேன் மழையை பொழியுதடி......!


வண்ணத்து பூச்சி போல 

எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!


கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ

கலங்கி நின்றாய்.........!




கதிரவன் உதித்தாலும்

நிலவது வளர்ந்தாலும்.....


நம்பிக்கையை

ஒளியாக்கி.......

நடையினிலே  துயில்கின்றாய்.......!


நீருக்குள் மீன்களென 

உன் வானம் மகிழுதடி.....!


வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று 

சிரிக்குதடி.....!


அவன் படைத்த உலகினிலே.....!


அனைத்துமே மாயை என.....உன் விழியை

மறைத்தானோ......???


இறைவன்...!!!



(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 17, 2025... இன்று 2025ம் ஆண்டின் கடைசி பிரதோஷம்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்