மாற்றுத்திறனாளி (கவிதை)

Oct 31, 2025,04:50 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!


எண்ணங்களும்.....

வண்ணங்களாய் உனது

கைகளிலே மலருதடி......!


ஸ்வரங்கள் கூட உன்னிடமே  சலங்கையிட்டு ஆடுதடி .......!


காற்றினிலே உன் குரலும் தென்றலென

வருடி விட்டு......


தேன் மழையை பொழியுதடி......!


வண்ணத்து பூச்சி போல 

எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!


கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ

கலங்கி நின்றாய்.........!




கதிரவன் உதித்தாலும்

நிலவது வளர்ந்தாலும்.....


நம்பிக்கையை

ஒளியாக்கி.......

நடையினிலே  துயில்கின்றாய்.......!


நீருக்குள் மீன்களென 

உன் வானம் மகிழுதடி.....!


வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று 

சிரிக்குதடி.....!


அவன் படைத்த உலகினிலே.....!


அனைத்துமே மாயை என.....உன் விழியை

மறைத்தானோ......???


இறைவன்...!!!



(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி

news

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது

news

வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

news

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்