டெல்லி: மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் எனவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் கூறியதாவது:
மகளிர்க்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது பாஜக அரசு. முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இன்றிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும். இதில் பெரிய சதி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறு வரையறை முடிந்த பின்னரே மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது .
நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் ஓபிசி சமுதாயத்தினர். ஆனால், மத்திய அரசில் உள்ள 90 துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். ஓபிசி பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் நிதியில் 5 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கின்றனர்.
மத்திய அரசிடம் ஓபிசி பிரிவினர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்கள் இல்லை. நாட்டின் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறினார் ராகுல் காந்தி.
முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி
கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு
PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!
எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!
ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!
Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?
Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!
அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!
{{comments.comment}}