வதோதரா: 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு வதோதராவில் தொடங்குகிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மும்பை அணியும், 2024 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.
பெங்களூரு ஆண்கள் அணி பல காலமாக சாம்பியன் பட்டத்தை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் 2வது போட்டித் தொடரிலேயே பெங்களூரு மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை அடித்துச் சென்று அசத்தியது.
இந்த நிலையில் இன்று 3வது போட்டித் தொடர் தொடறங்குகிறது. இந்த போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஐந்து அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியினருடன் தலா இரண்டு முறை போட்டியிடவுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் முதல் போட்டி வதோதராவில் தொடங்குகிறது. இதனையடுத்து பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இடையே முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வதோதராவில் தொடங்க இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவையும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}