மகளிர் ஐபிஎல் 2025 டி20 போட்டிகள்.. களம் புக காத்திருக்கும் மகளிர் படை.. இன்று கோலாகல தொடக்கம்

Feb 14, 2025,04:59 PM IST

வதோதரா:  2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு வதோதராவில் தொடங்குகிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.


இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மும்பை அணியும், 2024 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.


பெங்களூரு ஆண்கள் அணி பல காலமாக சாம்பியன் பட்டத்தை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் 2வது போட்டித் தொடரிலேயே பெங்களூரு மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை அடித்துச் சென்று அசத்தியது. 




இந்த நிலையில் இன்று 3வது போட்டித் தொடர் தொடறங்குகிறது. இந்த போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஐந்து அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியினருடன்  தலா இரண்டு முறை போட்டியிடவுள்ளன.


2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல்  முதல் போட்டி வதோதராவில் தொடங்குகிறது. இதனையடுத்து பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது.


நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இடையே முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வதோதராவில் தொடங்க இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவையும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்