மகளிர் ஐபிஎல் 2025 டி20 போட்டிகள்.. களம் புக காத்திருக்கும் மகளிர் படை.. இன்று கோலாகல தொடக்கம்

Feb 14, 2025,04:59 PM IST

வதோதரா:  2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு வதோதராவில் தொடங்குகிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.


இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மும்பை அணியும், 2024 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.


பெங்களூரு ஆண்கள் அணி பல காலமாக சாம்பியன் பட்டத்தை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் 2வது போட்டித் தொடரிலேயே பெங்களூரு மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை அடித்துச் சென்று அசத்தியது. 




இந்த நிலையில் இன்று 3வது போட்டித் தொடர் தொடறங்குகிறது. இந்த போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஐந்து அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியினருடன்  தலா இரண்டு முறை போட்டியிடவுள்ளன.


2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல்  முதல் போட்டி வதோதராவில் தொடங்குகிறது. இதனையடுத்து பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது.


நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இடையே முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வதோதராவில் தொடங்க இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவையும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்