சென்னை: அழகான ராட்சசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், பேயாய் நடித்தால் எப்படி இருக்கும்.. செமையா இருக்குல்ல.. கேட்கவே.. நாளைக்கு திரைக்கு வருகிறது, யாஷிகா பேயாய் நடித்துள்ள சைத்ரா படம்.
இது ஒரு திரில்லர் கலந்த ஹாரர் படமாகும். யாஷிகா ஆனந்த் இதில் பேயாய் நடித்துள்ளாராம். பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதேசமயம் பல படங்களிலும் சிறு சிறு ரோல்களில் நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு, கடமையை செய் போன்ற ஒருசில படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள புதிய படம்தான் சைத்ரா. பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக இருந்த ஜெனித்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே. மனோகரன் தயாரித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் ) சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை பிரபாகரன் மெய்யப்பன். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சதீஷ் குமார் செய்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

அழகிய தீயாய் வலம் வரும் யாஷிகாவை அழகிய பேயாய் பார்க்க தயாராகுங்கள்!
உறவுகள் விட்டுச் செல்லும் நினைவுகள்.. Our Signature Caption
வரம் வாங்கிப் பிறந்தவர்கள் நாம்... இருப்பினும் வருமுன் காப்போம்!
திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு
தவறுதான்.. நம்மை சரி செய்ய உதவும்..!
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு
படகு படகு.. வாழ்க்கைப் படகு.. The Boat!
தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு
தாராள குணம் உங்களை காலி செய்துவிடக் கூடாது.. Give but dont let it empty you
{{comments.comment}}