சென்னை: அழகான ராட்சசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், பேயாய் நடித்தால் எப்படி இருக்கும்.. செமையா இருக்குல்ல.. கேட்கவே.. நாளைக்கு திரைக்கு வருகிறது, யாஷிகா பேயாய் நடித்துள்ள சைத்ரா படம்.
இது ஒரு திரில்லர் கலந்த ஹாரர் படமாகும். யாஷிகா ஆனந்த் இதில் பேயாய் நடித்துள்ளாராம். பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதேசமயம் பல படங்களிலும் சிறு சிறு ரோல்களில் நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு, கடமையை செய் போன்ற ஒருசில படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள புதிய படம்தான் சைத்ரா. பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக இருந்த ஜெனித்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே. மனோகரன் தயாரித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் ) சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை பிரபாகரன் மெய்யப்பன். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சதீஷ் குமார் செய்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

அழகிய தீயாய் வலம் வரும் யாஷிகாவை அழகிய பேயாய் பார்க்க தயாராகுங்கள்!
Happy Rose Day.. ரோஜா.. ரோஜா..!
காவியக் காதல்!
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
{{comments.comment}}