சென்னை: யாவரும் வல்லவரே திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இப்படம் முழுக்க மிகப்பெரிய நடிகர் ஒருவருடைய போட்டோ ட்ராவல் ஆகும் அது யார் என்பது சஸ்பென்ஸ் என இயக்குனர் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு கூட்டணியில் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள யாவரும் வல்லவரே திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அன்பு என்பது நிஜ வாழ்வில் மட்டுமல்ல. சினிமாவிலும் என்றும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யாவரும் வல்லவரே திரைப்படம் ஹைபர் லிங்க் கதையாக உருவாகி உள்ளதாம்.இதில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் சைத்தான், அருந்ததி, மெட்ராஸ் ரித்திகா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு மிகப்பெரிய நடிகரோட போட்டோ இந்த படம் முழுக்க டிராவல் ஆகுமாம். அது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்குமாம்.

இப்படம் வரும் மார்ச் 15 அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தைப் பற்றி இயக்குனர் சக்கரவர்த்தி கூறுகையில்,
இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்டது. இளைஞர்கள், குடும்பம் என்று இந்தக் கதைக்கான பார்வையாளர்களைப் பிரிக்க முடியாது. ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம்.

குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது என கூறினார்.
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}