மிகப்பெரிய நடிகர் போட்டோ.. யாவரும் வல்லவரே படம் முழுக்க.. டிராவல் ஆகுமாம்.. அது யார் தெரியுமா?

Mar 02, 2024,03:29 PM IST

சென்னை: யாவரும் வல்லவரே திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இப்படம் முழுக்க மிகப்பெரிய நடிகர் ஒருவருடைய போட்டோ ட்ராவல் ஆகும் அது யார் என்பது சஸ்பென்ஸ் என  இயக்குனர் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.


சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு கூட்டணியில் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள யாவரும் வல்லவரே திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 




அன்பு என்பது நிஜ வாழ்வில் மட்டுமல்ல. சினிமாவிலும் என்றும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யாவரும் வல்லவரே திரைப்படம் ஹைபர் லிங்க் கதையாக உருவாகி உள்ளதாம்.இதில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் சைத்தான், அருந்ததி, மெட்ராஸ் ரித்திகா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு மிகப்பெரிய நடிகரோட போட்டோ இந்த படம் முழுக்க டிராவல் ஆகுமாம். அது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்குமாம்.




இப்படம் வரும் மார்ச் 15 அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தைப் பற்றி இயக்குனர் சக்கரவர்த்தி கூறுகையில்,


இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்டது. இளைஞர்கள், குடும்பம் என்று இந்தக் கதைக்கான பார்வையாளர்களைப் பிரிக்க முடியாது. ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம். 




குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்