சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மும்பை அணியின் விக்னேஷ் புதூர். 23 வயதாகும் விக்னேஷ் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு புதியவர். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்து விட்டார். 17 ரன் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் விக்னேஷ்.
கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த இடது கை ஸ்பின்னர். இவரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. மும்பை அணி ஏலத்தில் எடுத்தால் சாதாரண ஆளாகவா இருப்பார் அவர்? உண்மை தான் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்களை தூக்கி மிரட்டி விட்டார்.
கேரளாவில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி அனுபவம் கொண்டவர் இவர். தன்னுடைய 11வது வயதில் இருந்து இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் அலிப்பி ரிப்பில்ஸ் அணிக்காக விளையாடி புகழ்பெற்றவர். அதில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 பெரிய விக்கெட்களை கைப்பற்றினார். இது தான் மும்பை அணியை இவரை ஏலத்தில் ஐபிஎல்.,க்காக எடுக்க தூண்டியது.
ஐபிஎல் கிரிக்கெட் 2025 தொடரின் நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் இரண்டாவது விக்கெட்டிற்க ஜோடி சேர்ந்த ருதுராஜ் கைக்வாட் - ரவிந்திரா ஜோடி ரன்களை விளாசியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதில் சென்னை அணியின் ருதுராஜ் வெறும் 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இது ஐபிஎஸ் தொடரில் இவர் அடிக்கும் 19 வது அரைசதம் ஆகும். ஐபிஎல் தொடரில் இதுவரை 67 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் 2380 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியிடன் சேர்த்து மொத்தம் 19 அரைசதங்களை விளாசி உள்ளார். 2 சதங்களையும் எடுத்துள்ளார். ஐபிஎஸ் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன் ஸ்கோர் 108 ஆகும்.
தனது 19வது அரைசதத்ததை கடந்த சில நிமிடங்களிலேயே மும்பை அணியின் விக்னேஷ் புதுர் வீசிய பந்தில் ஜாக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}