பீஜிங்: சீனாவைச் சேர்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்து வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.
பரதநாட்டியம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பாரம்பரிய நடனமாகும். இந்த நடனம் தமிழ்நாட்டில் தோன்றி, தென்னிந்தியா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பரதநாட்டியம் புகழ் பெற்றும் விளங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தோன்றியது பரதம்.

இந்தகைய சிறப்பு வாய்ந்த பரதநாட்டியத்தை சீனாவில் உள்ள குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் லீ முசி. 13 வயதுடைய சீனாவை பூர்விகமாக கொண்ட லீ முசி பரதநாட்டிய கலையை கற்று முறையாக அரங்கேற்றம் செய்து புதிய வரலாற்றை நடைத்துள்ளார்.
சமீபத்தில் சீனாவில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தூதர் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடன விழாவை ஏராளமான சீன மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.
13 வயதுடைய லீ முசி சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையை கற்று பயிற்சி பெற்றுள்ளார். லீ முசியின் அரங்கேற்றம் குறித்து அவரது ஆசிரியர் லீலா சாம்சன் கூறுகையில், "தென்னிந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஒரு சீன மாணவியால் சீன ஆசிரியர் கொண்டு சீனாவில் அரங்கேற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. எனவே, இது பரதநாட்டியத்தில் ஒரு மைல்கல் மட்டுமல்லாது ஒரு வரலாற்று தருணமும் ஆகும். லீ முசியின் பரதநாட்டிய அரங்கேற்றமானது எங்களுக்கு ஒரு திருவிழாவைப் போன்றது" என்றார்.
இது குறித்து லீ முசி கூறுகையில், "பரதநாட்டியம் ஒரு அழகான நடனக் கலை மட்டுமல்லாமல், இந்திய கலாசாரத்தின் உருவகமாகவும் இருக்கிறது. பரதநாட்டிய நடனத்தின் அழகான அசைவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாசாரத்தில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். பரதநாட்டியமானது ஏற்கனவே எனது தினசரி வாழ்வின் செயல்பாடுகளில் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்றார். இந்த மாத இறுதியில் சென்னையில் லீ முசி நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}