சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தும் நகை பிரியர்கள் ஆர்வமாக தங்க நகைகளை வாங்கி உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிர்ஷ்டம், புண்ணியம், லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்தையும் குறைவின்றி அள்ளி தரக் கூடிய மிக முக்கியமான நாள் அட்சய திருதியை திருநாளாகும். வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியை அட்சய திருதியை நாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் தினம் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக நேற்று நகைக் கடைகளில் கூட்டம் அமோதியது.

இந்த நன்னாளில் எப்படியாவது நகையை வாங்கி விட வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள். இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை நாளான நேற்று திருதியை திதி காலை 6.33 மணிக்கு தொடங்கி மே 11ம் தேதியான இன்று அதிகாலை 4.56 மணி வரை இருந்தது. நேற்று அட்சய திருதியை திருநாள் என்பதால் பெரும்பாலான நகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருந்தன. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதினால், வெயிலுக்கு பயந்து காலையிலேயே நகை கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடைகளில் பழரசம், மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு நேற்று மட்டும் 3 முறை நகை விலை உயர்ந்தது. நகை விலை உயர்ந்தாலும் , அதனை பொருட்படுத்தாது நகை கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 24,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த முறை அட்சய திருதியை நாளில் விற்ற தங்கத்தை விட, இந்த முறை விற்கப்பட்ட தங்கத்தின் அளவு அதிகமே. வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே அன்றைய விலைக்கே நகையை முன்பணம் கட்டி புக்கிங் செய்து வைத்ததால், தங்கம் விலை உயர்வு வாடிக்கையாளர்களை பெரும்பாளும் பாதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமே ஒரே நாளில் 24,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது என்றால், இந்தியா முழுவதும் நேற்று எவ்வளவு தங்கம் விற்பனையாகி இருக்கும் என்பதை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவை பொருத்தவரை வட மாநிலங்களில் தான் அட்சய திருதியை கொண்டாட்டம், தங்கம் வாங்குவது எல்லாம் மிகவும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}