அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

Jul 08, 2025,10:31 AM IST

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்தியக் குடும்பம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து அதில் சிக்கி இந்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர், அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்து வந்தனர். கடந்த வாரம் அட்லாண்டாவில் உள்ள உறவினர்களைச் சந்தித்த இவர்கள், டல்லாஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.




கிரீன் கவுண்டி பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த மினி டிரக் ஒன்று இவர்கள் காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர மோதலில் கார் உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. காருக்குள் சிக்கிக் கொண்ட நான்கு பேரும் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.


கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானதால், உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டன. எனவே, தடயவியல் சோதனைக்காக எலும்புக்கூடு பாகங்களை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். டிஎன்ஏ மாதிரிகள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்ட பின்னரே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில், குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்கள் விபத்துகளில் சிக்குவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டல்லாஸ் அருகே நிகழ்ந்த பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், ஆர்யன் ரகுநாத் ஓரம்ப்பட்டி, ஃபாரூக் ஷேக், லோகேஷ் பாலச்சார்லா, தர்ஷினி வாசுதேவன் ஆகிய நான்கு இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கார் பூலிங் செய்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டிரக் ஒன்று இவர்களது எஸ்யூவி மீது மோதி தீப்பிடித்ததே விபத்துக்குக் காரணம்.


அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் நடந்த மற்றொரு கார் விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். அவர்களது கார் மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டு தீப்பிடித்ததில், அவர்களது டீன் ஏஜ் மகன் மட்டும் உயிர் தப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி... முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

news

பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்