அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

Jul 08, 2025,05:51 PM IST

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்தியக் குடும்பம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து அதில் சிக்கி இந்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர், அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்து வந்தனர். கடந்த வாரம் அட்லாண்டாவில் உள்ள உறவினர்களைச் சந்தித்த இவர்கள், டல்லாஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.




கிரீன் கவுண்டி பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த மினி டிரக் ஒன்று இவர்கள் காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர மோதலில் கார் உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. காருக்குள் சிக்கிக் கொண்ட நான்கு பேரும் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.


கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானதால், உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டன. எனவே, தடயவியல் சோதனைக்காக எலும்புக்கூடு பாகங்களை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். டிஎன்ஏ மாதிரிகள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்ட பின்னரே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில், குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்கள் விபத்துகளில் சிக்குவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டல்லாஸ் அருகே நிகழ்ந்த பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், ஆர்யன் ரகுநாத் ஓரம்ப்பட்டி, ஃபாரூக் ஷேக், லோகேஷ் பாலச்சார்லா, தர்ஷினி வாசுதேவன் ஆகிய நான்கு இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கார் பூலிங் செய்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டிரக் ஒன்று இவர்களது எஸ்யூவி மீது மோதி தீப்பிடித்ததே விபத்துக்குக் காரணம்.


அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் நடந்த மற்றொரு கார் விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். அவர்களது கார் மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டு தீப்பிடித்ததில், அவர்களது டீன் ஏஜ் மகன் மட்டும் உயிர் தப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்