சென்னை: இந்திய விமானப்படைத் தினத்தையொட்டி அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை சாகச கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை இன்று தொடங்கியது.
இந்திய விமானப்படை தொடங்கி 92 வருடங்களைத் தொட்டுள்ளது. உலக அளவில் உள்ள தலை சிறந்த விமானப்படைகளில் இந்தியாவுக்கும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழா நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6ம் தேதி சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை மெரீனா கடற்கரை வான்வெளிப் பகுதியில் விமானப்படை விமானங்கள் சாகசம் செய்து மக்களை மகிழ்விக்கவுள்ளன.
கிட்டத்தட்ட 72 வகையான விமானங்கள் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய கிரண் விமான சாகசம் உள்ளிட்ட பல்வேறு வகையான சாகச நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறும். மேலும் சாரங் ஹெலிகாப்டர் டீமும் இதில் பங்கேற்கவுள்ளது. ரபேல், தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்களையும் இந்த சாகச நிகழ்ச்சியின்போது மக்கள் கண்டு களிக்க முடியும். முற்றிலும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை தற்போது தொடங்கியுள்ளது. இன்று பிற்பகலில் மெரீனா கடற்கரைப் பகுதியில் நடந்த இந்த சாகச ஒத்திகையையும் மக்கள் பலர் கண்டு களித்தனர். வீரிட்ட சத்தத்துடன் விமானங்கள் ஒத்திகையைச் செய்து பார்த்தன. பலர் வீடுகளின் மொட்டை மாடிகளிலிருந்தும், அப்பகுதியில் உள்ள உயர்ந்த கட்டடங்களிலிருந்தும் இதைக் கண்டு மகிழ்ந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}