மூலையில் முடங்கிப் போன.. மலர்த் தோட்டம்!

May 31, 2023,02:54 PM IST
- கவிஞர் சீதாலட்சுமி

ஊர் எல்லை கழனியில் களையெடுக்கும் 
மூவெட்டு அகவைக்காரி அவள்....!!

வயம் பார்த்து காதல் கொள்ளவில்லை அவன்
கள்ளங்கபடமற்ற 
அகம் பார்த்தே  காதல் கொண்டான்......!!



பட்டாம்பூச்சியாக பறந்து 
திரிந்தவள்
தாலியின் வேலிக்குள் அடைபட்டாள்
முக்கனிகளாக மூன்று குழவி ஈன்றாள்..!!

ஆனந்தச் சோனையில் 
நித்தமும் நீந்தித் திளைத்தனர் வாழ்க்கையில்!
நிம்மதியான இல்லற சாகரத்தில்
திடீரென விழுந்த இடியாக
எங்கிருந்தோ வந்தாள் ஒருத்தி
அவனின் மன���ில் அடைமழையாய் அப்பிக் கொண்டாள்
அவன் உள்ளம் நுழைந்து அன்பைபொழிந்தாள்..!!

நெஞ்சம் மயங்கிய மணவாளன்
கட்டிய கோமகளை விட்டு  விலகினான்
மின்னல் தாக்கிய மரமாய் எரிந்து போனது முன்னவள் வாழ்க்கை!

வேகமாய்.. பிரவேசித்தவளின் மோகமும் ஆசையும்
நாட்கள் தேயத் தேய 
தீயத் தொடங்கி
மொத்தமாய் தீர்ந்தது ஓர் நாள்
வேஷம் புரிந்து எல்லாம் விஷமாய் மாறியபோது
விதிர்த்துப் போனான் நம்பி நின்றவன்

தான் செய்த துரோகமும்
தான் கலைத்த கூடும்
கலைந்து போன கனவுகளும்
மறைந்து போன மனவாட்டியும்
உள்ளத்தை உலுக்கியெடுக்க
முகம் விழிக்க வெட்கி
சித்தம் சிதைந்து சென்றான் 
மண்ணை விட்டு பிராயச்சித்தம்  தேடி!!
நம்பி வந்தவள்.. எல்லாம் போய்
கையறு நிலையில் கைம் பெண்ணாய்
மூலையில் முடங்கிப் போனது ஒரு மலர்த் தோட்டம்.. மணம் இழந்து!

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்