ஆன்மீகக் கதை.. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா?

Feb 27, 2023,09:33 AM IST
ஒரு காலத்தில் ஒரு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் இன்று ஒரு ரூபாயில் என்ன கிடைக்கும்? என கேட்டால் கொஞ்சம் யோசித்து தான் பதிலை தேட வேண்டி இருக்கு. கடைகளில் ஏதாவது பொருள் வாங்கி விட்டு சில்லறை இல்லை என்றால் கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் தருவார். அவ்வளவு மட்டும். அதை விட்டால் ஒரு ரூபாய், தற்போதை நவீன காலத்தில் அரிதாகி விட்ட டெலிபோன் பூத்தில் ஒரு ரூபாயை வைத்து ஒரு போன் கால் செய்யலாம்.



அதையும் விட்டால் திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் தான் இந்த ஒரு ரூபாயின் பயன்பாட்டை அதிகம் பார்க்க முடியும். விசேஷங்களில் மொய் செய்பவர்கள் எவ்வளவு பெரிய தொகையை மொய் பணமாக வைத்தால் அதோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து 501, 1001, 10,0001 என்ற எண்ணிக்கையில் தான் மொய் வைப்பார்கள். ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்றால் நமக்கு சிரிப்பும், கேலியும் தான் செய்ய தோன்றும். ஆனால் இந்த கதையை படித்தால் இதற்கான விடை புரியும்.




மழலை மாறாத சிறுவன் ஒருவன் கடை தெருவில், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். கடையில் இருப்பவர்களிடம் ஏதோ கேட்கிறான். அவர்கள் இல்லை என்றதும் திரும்பி வருகிறான். அப்படி என்ன கேட்டிருப்பான் அவன் கடையில், எந்த பொருளை கடைக்காரர்கள் இல்லை என்கிறார்கள் ? அவனது கையில் இருந்தது ஒரு ரூபாய். அதை காட்டி, இந்த ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா? என்று தான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அனைவரும் அவனை விரட்டி அடித்தனர்.

கடைசியாக மகா கஞ்சனான ஒருவனின் கடைக்கும் சென்று இதையே கேட்டுள்ளான் சிறுவன். அந்த கஞ்சனோ கோபமாகி, சிறுவனை துரத்தவே துவங்கி விட்டார். அவனும் ஓடுகிறான். ஒரு காஸ்ட்லியான காரின் முன் அந்த சிறுவன் தவறி விழுந்து விடுகிறான். அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பெரும் பணக்காரர், " ஏனப்பா இப்படி ஓடி வருகிறாய்? அவர் ஏன் உன்னை துரத்துகிறார்? ஏதாவது பொருளை திருடி விட்டாயா?" என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் ஒரு ரூபாய்க்கு இறைவனை கேட்டேன் அதற்காக தான் என்னை துரத்துகிறார் என்றான்.

இதை கேட்டு கொஞ்சம் குழப்பமான அந்த பணக்காரர், "சரி, ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கி என்ன செய்ய போகிறாய்?"என்றார். அதற்கு அந்த சிறுவன், இந்த உலகில் எனக்கு ஆதரவாக இருப்பது எனது தாய் மட்டும் தான். அவரும் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் உள்ளார். அவரை குணப்படுத்த நிறைய பணம் வேண்டுமாம். எங்களிடம் வசதி இல்லை. அதனால் டாக்டர்கள் அனைவரும், உன் அம்மாவை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி விட்டனர். என்னிடம் இருப்பது இந்த ஒரு ரூபாய் தான். அதனால் தான் இந்த ஒரு ரூபாயை வைத்து இறைவனை வாங்கி எனது தாயை காப்பாற்றுவதற்காக எந்த கடையில் இறைவன் கிடைப்பார் என தேடிக் கொண்டிருக்கிறேன் என்றான் மழலை குரலில்.

இதைக் கேட்ட அந்த பணக்காரர், அந்த சிறுவனின் தாயின் மருத்துவ செலவிற்கு உதவி, அவர் உயிர் பிழைக்க உதவுகிறார். இதில் கடைசியாக அந்த சிறுவனின் நம்பிக்கையே வென்றுள்ளது. நெருக்கடியான சூழலில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் ஒவ்வொருவரும் இறைவனுக்கு சமமே. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பார் என அப்பழுக்கற்ற தூய எண்ணத்துடன், ஒரு துளியும் சந்தேகம் இல்லாமல் அந்த சிறுவன் வைத்த நம்பிக்கையை தானே இறைவன் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பது? 

நீயே கதியென்று சரணடைந்து, நம்பிக்கையுடன் இறைவன் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, தூய அன்பு அது வாழ்வில் வெற்றியை மட்டுமே தரும்.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்