சென்னை: நில அபகரிப்பு வழக்கிலிருந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, சைதாப்பேட்டையில் ஒரு நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அவர் வாங்கினார். ஆனால் இந்த நிலம் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக, திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பொன்முடி உள்பட மொத்தம் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில் சார்பதிவாளர் புரு பாபு, பொன்முடி மாமியார் சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ சைதை கிட்டு ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி. ஜெயவேல் இன்று தீர்ப்பை அறிவித்தார். அதில் சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 90 சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்றும் இதனால் அப்பீல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
{{comments.comment}}