நாளை சூரிய புயல் பூமியை தாக்குமா?.. பகீர் கிளப்பும் நாசா

Jul 12, 2023,11:17 AM IST
நியூயார்க் : ஜூலை 13 ம் தேதியான நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என நாசா எச்சரித்துள்ளது. இது பூமியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூரிய புயலால் வளி மண்டல அடுக்கில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படலாம் என்றும், வட அமெரிக்காவின் பல பகுதிகள் இந்த சூரிய புயலால் பாதிக்கப்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மைனரான ஜி1 புவிகாந்த புயலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புவியில் காந்தவியல் தன்மையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவம் சொல்லப்படுகிறது. 



அமெரிக்காவின் வாஷிங்டன், அலாஸ்கா, நியூயார்க், மிச்சிகன், இண்டியானா, மெரிலாந்து உள்ளிட்ட 13 அமெரிக்க மாகாணங்களில் இந்த சூரிய புயலை உணர முடியும். இதனால் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இணையதள சேவையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல எலக்ட்ரானிக் மின்னணு சாதனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இந்த சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா தவிர வேறு எந்தெந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி நாசா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காற்றின் தன்மைகளில் மாறுபாடு ஏற்படலாம். அதோடு பூமியின் கிழடுக்கு நீள்வட்ட பாதையில் இருக்கும் செயற்கைக் கோள்களையும் இது பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்