வாட்டி வதைக்கும் சென்னை வெயில்.. காரணம் என்னன்னு தெரியுமா ?

May 16, 2023,12:53 PM IST
சென்னை : சென்னையில் தொடர்ந்து வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது.

இந்த ஆண்டில் கடந்த சில நாட்களாக சென்னை வெயில் 40 டிகிரி செல்சியசை கடந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தற்போது தான் சென்னை வெயில் 40 டிகிரியை தாண்டி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமலும், தங்களின் அன்றாட வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் வியர்வையிலும், புளுக்கத்திலும் தவித்து வருகின்றனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மே மாதத்தில் சென்னையில் வெப்பநிலை 40 டிகிரியை கடந்தது என்றாலும் அப்போது லாக்டவுனில் இருந்ததால் பெரும்பாலானவர்கள் ஒர்க் ஃபிரம் ஹோம் செய்து வந்தனர். தொழில்களும் பெரிதாக துவங்கப்படவில்லை. அதனால் இந்த அளவிற்கு மக்கள் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. 



சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்துகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகியவற்றில் 40.08 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 3.4 மற்றும் 2.4 டிகிரிகள் அதிகம். மொர்சா புயல் தான் இதற்கு காரணம். மொர்சா புயல், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விட்டதால் தான் இந்த அளவிற்கு வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக பலர் மொர்சா புயல் மீது பழி போடுகிறார்கள். 

இதே வெப்பம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வரை 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் வெயிலுக்கு பயந்து வீட்டிற்குள்ளாகவே இருக்கலாம் என்றால் கூட தண்ணீர், தரை, ஃபேன் காற்று என அனைத்தும் அனலை கக்குகின்றன. 

திடீரென அதிகரித்த இந்த வெப்பத்திற்கு காரணம் என்ன என பலரும் குழம்பி வரும் நிலையில் இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், மொர்சா புயலால் காற்றின் திசை மாறியது, காற்று ஒரே திசையில் அடிக்காததால் மேகங்கள் கூடி, சாரல் மழை விழுவது தவறியது போன்ற பல காரணங்கள் வெப்பநிலை அதிகரித்துள்ளதற்கு காரணம். 

ஆந்திராவில் இருந்து வரும் அனல் காற்று அப்படியே தமிழகம் வழியாக கடந்து செல்வதால் தான் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் காற்றில் வெப்பம் அதிகமாக உள்வாங்கப்படுவதால் சென்னையின் கடலோர பகுதிகளில் வெப்பம் 41 டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். இதே கருத்தை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்