- கவிதா உடையப்பன், சேலம்
சரியான தேர்வை செய்யாததினால்
சேர்ந்தது பெரும் துயரம்
திடமான திட்டம் தீட்டாததினால்
தவறியது வாழ்வின் பயணம்
பட்ட கடனால்,
தடம் புரண்டான், இடம் பெயர்ந்தான்
குடும்பச் சுமை கூடியது, சுவை குன்றியது
கோடை வெய்யில் குறையாதா ?
ஆடிக்காற்றும் தான் வீசாதா ?” என்று தினம் பார்த்திருந்தான்
கட்டம் சரியில்லை என்றார் ஜோதிடர்
கொட்டம் அடங்கியது என்றனர் சிலர்
செல்வம் இல்லா சூழலில்
அவன் சொல்லிற்கும் மதிப்பில்லை
கனவிற்கும் துணிவில்லை

அவன் யோசனைகளை கேட்பாருமில்லை
அவன் யாசிப்பதை கொடுப்பாரும் இல்லை
யாழ் இசையும் இனிக்கவில்லை
யாவரும் அவனை கவனிக்கவில்லை
தாழ்பாளை திறந்தான், தன் அகத்தை கண்டான்
எண்ணிலடுங்கா வழிகள் தென்பட்டன, விழிகள் விரிந்தன
எண்ணங்கள் எழுத்தாயின, எழுத்துக்கள் ஈட்டின
இழந்த செல்வதை மீட்டினான், மீண்டும் தலை காட்டினான்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}