கடன் மாற்றும் தடம்

Oct 04, 2025,04:58 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


சரியான தேர்வை செய்யாததினால் 

சேர்ந்தது பெரும் துயரம் 

திடமான திட்டம் தீட்டாததினால் 

தவறியது வாழ்வின் பயணம் 


பட்ட கடனால், 

தடம் புரண்டான், இடம் பெயர்ந்தான்  

குடும்பச் சுமை கூடியது, சுவை குன்றியது  


கோடை வெய்யில் குறையாதா ?

ஆடிக்காற்றும் தான் வீசாதா ?” என்று தினம் பார்த்திருந்தான் 


கட்டம் சரியில்லை என்றார் ஜோதிடர் 

கொட்டம் அடங்கியது என்றனர் சிலர்


செல்வம் இல்லா சூழலில் 

அவன் சொல்லிற்கும் மதிப்பில்லை 

கனவிற்கும் துணிவில்லை 




அவன் யோசனைகளை கேட்பாருமில்லை 

அவன் யாசிப்பதை கொடுப்பாரும் இல்லை 

யாழ் இசையும் இனிக்கவில்லை 

யாவரும் அவனை கவனிக்கவில்லை 


தலை குனிந்தான் அப்பொழுதுதான் 

தாழ்பாளை திறந்தான்,  தன் அகத்தை  கண்டான்


எண்ணிலடுங்கா வழிகள் தென்பட்டன, விழிகள் விரிந்தன 

எண்ணங்கள் எழுத்தாயின, எழுத்துக்கள் ஈட்டின

இழந்த செல்வதை மீட்டினான், மீண்டும் தலை காட்டினான்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்