கடன் மாற்றும் தடம்

Oct 04, 2025,04:58 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


சரியான தேர்வை செய்யாததினால் 

சேர்ந்தது பெரும் துயரம் 

திடமான திட்டம் தீட்டாததினால் 

தவறியது வாழ்வின் பயணம் 


பட்ட கடனால், 

தடம் புரண்டான், இடம் பெயர்ந்தான்  

குடும்பச் சுமை கூடியது, சுவை குன்றியது  


கோடை வெய்யில் குறையாதா ?

ஆடிக்காற்றும் தான் வீசாதா ?” என்று தினம் பார்த்திருந்தான் 


கட்டம் சரியில்லை என்றார் ஜோதிடர் 

கொட்டம் அடங்கியது என்றனர் சிலர்


செல்வம் இல்லா சூழலில் 

அவன் சொல்லிற்கும் மதிப்பில்லை 

கனவிற்கும் துணிவில்லை 




அவன் யோசனைகளை கேட்பாருமில்லை 

அவன் யாசிப்பதை கொடுப்பாரும் இல்லை 

யாழ் இசையும் இனிக்கவில்லை 

யாவரும் அவனை கவனிக்கவில்லை 


தலை குனிந்தான் அப்பொழுதுதான் 

தாழ்பாளை திறந்தான்,  தன் அகத்தை  கண்டான்


எண்ணிலடுங்கா வழிகள் தென்பட்டன, விழிகள் விரிந்தன 

எண்ணங்கள் எழுத்தாயின, எழுத்துக்கள் ஈட்டின

இழந்த செல்வதை மீட்டினான், மீண்டும் தலை காட்டினான்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

news

மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

news

அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!

news

திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை

news

பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

news

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

news

மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை

news

சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்