லஞ்சம் தஞ்சம்!

Oct 06, 2025,05:02 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


பதைபதைத்தது நெஞ்சம்

கொடுத்து விட்டேனடி லஞ்சம்

நெறியல்ல என்று தெரிந்தும்


தழுதழுத்தது குரல்

முன்வரிசையில் நின்றோர் வினவ

சுய மானம் நழுவ


என் செய்வேனடி நானும்?

நேர் வழியில் செல்ல, நேரமில்லையடி

உரிய முறையில் செல்ல உதவும் கரங்களில்லையடி


துடிதுடித்தது எனது நா

அந்த ஊழியரைப் பிடித்து உலுக்க

இங்கு சாமான்யனோ பரிதவிக்க


ஏனடா இந்நிலை?

மனித பேராசையினால் வந்த சூழ்நிலை!

மாறும் ஒரு நாள் வானிலை




கிடுகிடுத்தது வானம்!

அக்கிரமங்களை எச்சரித்து

சத்தியப்பாதையை எடுத்துரைத்து


எப்படித்தான் இயங்குவது?

ஈட்டுவது நல்வழியிலா என்று இல்லத்தாரும் பரிசீலிப்போம்

"என் பணி என் கடமை" என்றே நாம் செயல்படுவோம்


மன சஞ்சலம் கலைந்து

உயர் லட்சியமதில் நனைந்து

தஞ்சம் அடைவோமே அறவாழ்வில்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்