லஞ்சம் தஞ்சம்!

Oct 06, 2025,05:02 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


பதைபதைத்தது நெஞ்சம்

கொடுத்து விட்டேனடி லஞ்சம்

நெறியல்ல என்று தெரிந்தும்


தழுதழுத்தது குரல்

முன்வரிசையில் நின்றோர் வினவ

சுய மானம் நழுவ


என் செய்வேனடி நானும்?

நேர் வழியில் செல்ல, நேரமில்லையடி

உரிய முறையில் செல்ல உதவும் கரங்கலில்லையடி


துடிதுடித்தது எனது நா

அந்த ஊழியரைப் பிடித்து உலுக்க

இங்கு சாமான்யனோ பரிதவிக்க


ஏனடா இந்நிலை?

மனித பேராசையினால் வந்த சூழ்நிலை!

மாறும் ஒரு நாள் வானிலை




கிடுகிடுத்தது வானம்!

அக்ரமங்கை எச்சரித்து

சத்யப்பாதையை எடுத்துரைத்து


எப்படித்தான் இயங்குவது?

ஈட்டுவது நல்வழியிலா என்று இல்லத்தாரும் பரிசீலிப்போம்

"என் பணி என் கடமை" என்றே நாம் செயல்படுவோம்


மன சஞ்சலம் கலைந்து

உயர் லட்சியமதில் நனைந்து

தஞ்சம் அடைவோமே அறவாழ்வில்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பீகார் சட்டசபை தேர்தல் 2025.. 2 கட்டமாக நவம்பர் 6, 11 ல் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

news

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

news

எத்தனை மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது தெரியுமா.... இதோ வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

news

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி

news

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!

news

அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்