லஞ்சம் தஞ்சம்!

Oct 06, 2025,05:02 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


பதைபதைத்தது நெஞ்சம்

கொடுத்து விட்டேனடி லஞ்சம்

நெறியல்ல என்று தெரிந்தும்


தழுதழுத்தது குரல்

முன்வரிசையில் நின்றோர் வினவ

சுய மானம் நழுவ


என் செய்வேனடி நானும்?

நேர் வழியில் செல்ல, நேரமில்லையடி

உரிய முறையில் செல்ல உதவும் கரங்களில்லையடி


துடிதுடித்தது எனது நா

அந்த ஊழியரைப் பிடித்து உலுக்க

இங்கு சாமான்யனோ பரிதவிக்க


ஏனடா இந்நிலை?

மனித பேராசையினால் வந்த சூழ்நிலை!

மாறும் ஒரு நாள் வானிலை




கிடுகிடுத்தது வானம்!

அக்கிரமங்களை எச்சரித்து

சத்தியப்பாதையை எடுத்துரைத்து


எப்படித்தான் இயங்குவது?

ஈட்டுவது நல்வழியிலா என்று இல்லத்தாரும் பரிசீலிப்போம்

"என் பணி என் கடமை" என்றே நாம் செயல்படுவோம்


மன சஞ்சலம் கலைந்து

உயர் லட்சியமதில் நனைந்து

தஞ்சம் அடைவோமே அறவாழ்வில்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்