- கவிஞர் க.முருகேஸ்வரி
மானே
நீ போட்டதால்
பூக்கோலம் ஆனதடி
உன் மாக்கோலம் !!!!!
கண்ணே
நீ வரைந்ததால்
உயிர் பெற்று வந்ததடி உன் மயில் கோலம்!!!!!
பெண்ணே
நீ தொட்டதால் வாசம்
வீசிப் போனதடி
உன் வாசல் கோலம்!!!!!

அழகே
நீ புள்ளி வைத்ததால்
கண்ணசைத்து புன்னகைத்தது
உன் பூசணிப்பூக் கோலம்
பூவே
நீ ரசித்ததால்
சிரிக்குதடி சிங்காரி
உன் ரங்கோலிக் கோலம்
மங்கை உன் கோலத்திலே!!!!!!!
மயங்கிய வேகத்தில்
தையும் தானே பிறந்ததே!
கோலமயிலே
அடுத்த ஜென்மத்திலாவது
கோலமாவாய் நான் பிறக்க வேண்டும்!!!!????
உன் கைகளில் கொஞ்சி விளையாட வேண்டும்!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}