- கவிஞர் க.முருகேஸ்வரி
மானே
நீ போட்டதால்
பூக்கோலம் ஆனதடி
உன் மாக்கோலம் !!!!!
கண்ணே
நீ வரைந்ததால்
உயிர் பெற்று வந்ததடி உன் மயில் கோலம்!!!!!
பெண்ணே
நீ தொட்டதால் வாசம்
வீசிப் போனதடி
உன் வாசல் கோலம்!!!!!

அழகே
நீ புள்ளி வைத்ததால்
கண்ணசைத்து புன்னகைத்தது
உன் பூசணிப்பூக் கோலம்
பூவே
நீ ரசித்ததால்
சிரிக்குதடி சிங்காரி
உன் ரங்கோலிக் கோலம்
மங்கை உன் கோலத்திலே!!!!!!!
மயங்கிய வேகத்தில்
தையும் தானே பிறந்ததே!
கோலமயிலே
அடுத்த ஜென்மத்திலாவது
கோலமாவாய் நான் பிறக்க வேண்டும்!!!!????
உன் கைகளில் கொஞ்சி விளையாட வேண்டும்!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
அடுத்து முழு என்டர்டெய்னர் படம்தான்: சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு!
விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித்... இது தேவையா? - சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்
பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!
{{comments.comment}}