- கவிஞர் க.முருகேஸ்வரி
மானே
நீ போட்டதால்
பூக்கோலம் ஆனதடி
உன் மாக்கோலம் !!!!!
கண்ணே
நீ வரைந்ததால்
உயிர் பெற்று வந்ததடி உன் மயில் கோலம்!!!!!
பெண்ணே
நீ தொட்டதால் வாசம்
வீசிப் போனதடி
உன் வாசல் கோலம்!!!!!

அழகே
நீ புள்ளி வைத்ததால்
கண்ணசைத்து புன்னகைத்தது
உன் பூசணிப்பூக் கோலம்
பூவே
நீ ரசித்ததால்
சிரிக்குதடி சிங்காரி
உன் ரங்கோலிக் கோலம்
மங்கை உன் கோலத்திலே!!!!!!!
மயங்கிய வேகத்தில்
தையும் தானே பிறந்ததே!
கோலமயிலே
அடுத்த ஜென்மத்திலாவது
கோலமாவாய் நான் பிறக்க வேண்டும்!!!!????
உன் கைகளில் கொஞ்சி விளையாட வேண்டும்!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
{{comments.comment}}