- கவிஞர் க.முருகேஸ்வரி
மானே
நீ போட்டதால்
பூக்கோலம் ஆனதடி
உன் மாக்கோலம் !!!!!
கண்ணே
நீ வரைந்ததால்
உயிர் பெற்று வந்ததடி உன் மயில் கோலம்!!!!!
பெண்ணே
நீ தொட்டதால் வாசம்
வீசிப் போனதடி
உன் வாசல் கோலம்!!!!!

அழகே
நீ புள்ளி வைத்ததால்
கண்ணசைத்து புன்னகைத்தது
உன் பூசணிப்பூக் கோலம்
பூவே
நீ ரசித்ததால்
சிரிக்குதடி சிங்காரி
உன் ரங்கோலிக் கோலம்
மங்கை உன் கோலத்திலே!!!!!!!
மயங்கிய வேகத்தில்
தையும் தானே பிறந்ததே!
கோலமயிலே
அடுத்த ஜென்மத்திலாவது
கோலமாவாய் நான் பிறக்க வேண்டும்!!!!????
உன் கைகளில் கொஞ்சி விளையாட வேண்டும்!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}