ஆலோலம் பாட்டுக் கேட்குதே

Jun 17, 2026,03:29 PM IST
- பாவலர் மாயோன் மங்கை

ஆலக் கரும்பு காடு
ஆலக்கரும்புக் காடு

அடுத்தடுத்து சோளக்காடு
அடுத்தடுத்துச் சோளக்காடு

கரும்புக் காட்டுக்குள்ளே
கரச்சாங்குருவி ஒன்னு

காதலனக்  காணாமெ
கரஞ்சுதான் பாடிடுதே
கரஞ்சுதானேபாடிடுதே

வர்றவங்க போறவங்க
வலியக் கேட்காம
வந்த வழி போறாங்க
வந்த வழி போறாங்க

வெள்ளச் சோளக்காடு
வெளஞ்ச நல்ல காடு




சோளத்தத் தின்னு தின்னு
சோக்காத்தான் இருக்குதுங்க

கரச்சாங்குருவியிலே
பெண் கரச்சான் ராகம்போட

கட்ட வண்டி மாமனும்தான்
கிட்ட வந்து கேட்டானே

மாமன் தான் கேட்டதுமே
மடி மேலே விழுந்தழுது

காதலன் என்ன விட்டு
வேறெ காதல்  செய்யறாரே

நாலு நாளாச்சு 
நாங்க ரெண்டும் பார்த்துத்தான்

நானுந்தான் வான் பறந்து
வலியவலியத் தேடுறனே

சோகம்  தாங்காமெ சொல்லிய
கரச்சானுக்கு

மேக மா மழை பொழிய
மேனியத் தடவித்தந்து

கரையாதே உருகுதே
ஆறறிவு மனுசனுமே

காதலத்தான் மறக்கறாங்க
கட்டியவள வெறுக்கறாங்க


மாமனும் சொல்லுச்சே
மலைமலையா அழுதுச்சே

எனக்கும் அழுகை தான்
என் கரச்சானே  எங்கே நீ போனே
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

Tamil Short Story: எதார்த்தம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்