சென்னை: நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீரென பாஜகவை விட்டு விலகி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார்.
அண்ணாமலையுடன் அவ்வளவு பாசமாக, வெறித்தனமான அன்பு காட்டி பழகி வந்தவர் ஆர்.கே.சுரேஷ். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு கடந்த முறை அண்ணாமலை அஞ்சலி செலுத்த வந்தபோது அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆக்ரோஷமாக கோஷமிட்டு அனைவரையும் அதிர விட்டவர் ஆர்.கே.சுரேஷ்.
இந்த நிலையில்தான் ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷ் சிக்கினா். சில காலம் தலைமறைவாகவும் இருந்து வந்தார். பின்னர் போலீஸில் சரணடைந்தார். அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்றும் இனி சினிமா மட்டும்தான் என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம்தான், ஆர்.கே.சுரேஷின் முதல் கட்சி ஆகும். அங்கு செயல்பட்டு வந்த அவர் பின்னர் அதிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாகவும் பழகி வந்தார். ஆனால் ஆருத்ரா வழக்கில் சிக்கிய பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிய அவர் பின்னர் அதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில்தான் திடீரென தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார். பாரிவேந்தர் நடத்தி வரும் கட்சிதான் இந்திய ஜனநாயகக் கட்சி. பெரம்பலூரை மையமாக கொண்டு செயல்படும் கட்சி இது. இக்கட்சி சார்பில் முதலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.பியாக இருந்தவர் பாரிவேந்தர். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றார். ஆனால் படுதோல்வி அடைந்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். பாஜகவிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் உள்ள கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் பாஜகவை தான் முழுமையாக வெறுக்கவில்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் சுரேஷ் என்று கூறப்படுகிறது.
ஐஜேகேவில் நிபந்தனையுடன் புதிய பதவி

இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ள ஆர்.கே.சுரேஷுக்கு அகில இந்திய அமைப்புச் செயலாளர் என்ற பதவியையும் அக்கட்சி கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பதவி தற்காலிகமானதே. இது நிரந்தரமாக வேண்டும் என்றால் சில நிபந்தனைகளையும் கட்சி விதித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்று பணி சிறக்க வாழ்த்துகிறேன். மேலும் இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். இச்செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்களது பதவி நீட்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}