சென்னை: மாப்பிள்ளை ரவி மோகனுக்கு ஒரு வேண்டுகோள். உங்களை நாங்கள் எப்போதுமே ஹீரோவாகத்தான் பார்த்து வருகிறோம், ரசிக்கிறோம். அதிலிருந்து இறங்கி தரம் தாழ்ந்து விடாதீர்கள் என்று அவரது மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்த திருப்பமாக தனது தோழியும் பின்னணிப் பாடகியுமான கெனிஷாவுடன் கை கோர்த்து பொது நிகழ்ச்சியில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார் ரவி மோகன்.
இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி பரபரப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதையடுத்து ரவி மோகனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனது மாமியார் சுஜாதா விஜயக்குமார் வாங்கிய கடனை தான் கட்ட நேரிட்டதாக கூறியிருந்தார். இதற்கு சுஜாதா விஜயக்குமார் தற்போது பதில் அளித்துள்ளார். ரவி மோகன்- ஆர்த்தி ரவி பிரச்சினை வெடித்ததற்குப் பிறகு முதல் முறையாக சுஜாதா விஜயக்குமார் பேசியுள்ளார்.
சுஜாதா விஜயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வணக்கம். கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்கு தெரியும். இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்த படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப்பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிடித்தவள், பணத்தை சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னை பற்றி உலவி வருகின்றன. அப்பொழுது இதற்கு விளக்கம் தர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னை பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாக எவ்விடும் என்பதனால் இந்த விளக்கம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். சுந்தர்.சி அவர்கள் கதாநாயகன் நடித்த படம் எனக்கு வெற்றியை கொடுத்தது தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி, நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்று யோசனை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன். ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் போது அது குடும்ப மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்கமறு என்ற திரைப்படம் விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில்தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
இந்தக் காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்த திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கைகூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பதும் என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அடங்கமறு. பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிக்கும் மேலாக பைனான்சியர்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்த பணத்தில் 25 சதவீதத்தை ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கியுள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு பணம் செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
இப்போது ஜெயம் ரவி அவர்கள் இந்த படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என் மாப்பிள்ளை என்பதை தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன். அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்த விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட, ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல.
ஜெயம் ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம்ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயகன் பிம்பத்திலேயே நாங்கள் பார்த்திருக்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சினையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்தில் இருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை.
இன்றுவரை என் பேரக் குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இனைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது.
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளையும், குடும்பத்தையும் பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய வேதனையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என்று கூறியுள்ளார் சுஜாதா விஜயக்குமார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை.. உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல 7 எம்பி.,க்கள் அடங்கிய குழு!
மத்திய அரசு கேட்டது 4 பேர்.. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் இது.. கடைசியில் செலக்ட் ஆனது இவர்!
மாப்பிள்ளை, எப்போதுமே ஹீரோவாக இருங்க.. தரம் தாழ்ந்து விடாதீர்கள்.. ரவி மோகனுக்கு மாமியார் வேண்டுகோள்
தமிழகத்தில்.. இன்று முதல் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்!
11வது முறையாக தாத்தாவாகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. பேரன் பேரு என்ன தெரியுமா?
வர்த்தக தடையை மீறி.. எமிரேட்ஸ் வழியாக.. இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பும் பாகிஸ்தான்!
அமெரிக்காவில் பரபரப்பு.. குளறுபடியாக பேசிய ஜோ பைடன்.. வெளியான ஆடியோவால் சர்ச்சை!
பை, புக்ஸ் வேண்டாம்.. நீங்க வந்தா மட்டும் போதும்.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன கேரள அரசு!
Maman movie.. நடிகர் சூரியை.. பலே பாண்டியா என்று புகழாரம் சூட்டிய.. கவிஞர் வைரமுத்து..!
{{comments.comment}}