புயல் நிவாரணத்திற்கு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி 10 லட்சம் நிதி உதவி

Dec 05, 2023,02:43 PM IST
சென்னை: புயல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்டமாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக நடிகர் சூர்யா கார்த்திக் அறிவித்துள்ளனர்.

தங்களது ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி சென்னையையே புரட்டிப்போட்டு விட்ட மிக்ஜாம் புயலால் சென்னை வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு இதுவரை ஏழு பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஞாயிறு இரவு முழுவதும் பெய்து வந்த மழையால் நகரின் பல பகுதியின் சாலைகளில் வெள்ள நீர் நிரம்பி நின்றன. சென்னையில் முக்கிய பகுதிகலான நுங்கம்பாக்கம், அண்ணா நகர், தி நகர், வியாசர்பாடி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, நந்தனம், திருமங்கலம், அத்திப்பட்டு உள்ளிட்ட அநேக இடங்களில் மழை நீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. 



இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து பெய்ததினால் அங்கும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. சென்னை மக்களுக்கு தமிழ்நாடு  முதல்வர் மு க ஸ்டாலின் முதற்கட்ட நிவாரணங்களை வழங்கி வருகிறார். 

இந்நிலையில், தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இணைந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரண முதற்கட்ட நிதியாக ரூபாய் பத்து லட்சம் உதவி தொகையை அறிவித்து உள்ளனர். தங்களது ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் நடிகர்கள் சூர்யா கார்த்தி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்