இப்படியே விட்டு விடக் கூடாது.. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.. அமலா பால் கோரிக்கை

Aug 31, 2024,05:53 PM IST

கொச்சி: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது வரவேற்புக்குரியது. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதை இப்படியே விட்டு விடாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.


சமீபத்தில் கேரளாவில்  வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளாவில் பூகம்பமே கிளம்பியுள்ளது எனலாம். அந்த அறிக்கையில் கேரள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டவர்களின் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கம் 'அம்மா' கலைக்கப்பட்டது. 




இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மற்ற திரையுலகினரும் இதுகுறித்துப் பேசி வருகிறார்கள். ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சமந்தா வெளியிட்ட பதிவில், தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் உமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையினால் பெண்களுக்கு பணியின் போது பாதுகாப்பு சூழல் அமையும் என்று தெரிவித்துள்ளார். 


அதேபோல, மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள நடிகை அமலா பாலும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறுகையில்,  ஹேமா கமிட்டி அதிர்ச்சி அளிக்கிறது, அச்சுறுத்துகிறது. அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த அறிக்கையை வெளியில் கொண்டு வர மலையாளத் திரையுலகைச் சேர்ந்த மகளிர் குழு மிகத் தீவிரமாக பாடுபட்டது. அதற்குக் கிடைத்த வெற்றியே இது. இந்த முயற்சியில் அவர்கள் தனித்து இல்லை. சட்டம் அவர்களுக்குத் துணை நின்றது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அப்படியே நீர்த்து போய் விடக் கூடாது. முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அமலா பால்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்

news

சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!

news

INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!

news

அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்

news

கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா

news

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது

news

சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!

news

ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்