கவுதமி, தடா பெரியசாமிக்கு முக்கியப் பதவி.. பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக மெசேஜ்!

Oct 21, 2024,05:16 PM IST

சென்னை: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.


நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்து பணியாற்றி வந்தார். விருதுநகர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதியிலேயே தங்கியும் பணியாற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்கு பல ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் பாஜக தராத நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலிலாவது சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். அப்போதும் அவருக்கு சீட் எதுவும் பாஜக வழங்கவில்லை. 


இந்த நிலையில், தன்னுடைய சொத்து பிரச்சனை மற்றும் தனக்கு ஏற்பட்ட மனகசப்பு உள்ளிட்ட காரணங்களினால் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அத்துடன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார்.




அதேபோல  பாஜகவில் எஸ்சி அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமியும் மக்களவை தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கவுதமி மற்றும் தடா பெரியசாமி பாஜக கட்சியில் இருந்து விலகி நிலையில், அவர்களுக்கு தற்போது எடப்பாடி கே பழனிச்சாமி முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார். இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்து நிர்மல்குமார் உள்ளிட்டோர் அதிமுக பக்கம் வந்து பதவிகளைப் பெற்றனர். பாஜகவுடன் உரசல் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கியப் பதவிகள் கிடைத்திருப்பது பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி  கொடுத்துள்ள மறைமுக மெசேஜ் ஆக பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்