கவுதமி, தடா பெரியசாமிக்கு முக்கியப் பதவி.. பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக மெசேஜ்!

Oct 21, 2024,05:16 PM IST

சென்னை: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.


நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்து பணியாற்றி வந்தார். விருதுநகர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதியிலேயே தங்கியும் பணியாற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்கு பல ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் பாஜக தராத நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலிலாவது சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். அப்போதும் அவருக்கு சீட் எதுவும் பாஜக வழங்கவில்லை. 


இந்த நிலையில், தன்னுடைய சொத்து பிரச்சனை மற்றும் தனக்கு ஏற்பட்ட மனகசப்பு உள்ளிட்ட காரணங்களினால் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அத்துடன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார்.




அதேபோல  பாஜகவில் எஸ்சி அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமியும் மக்களவை தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கவுதமி மற்றும் தடா பெரியசாமி பாஜக கட்சியில் இருந்து விலகி நிலையில், அவர்களுக்கு தற்போது எடப்பாடி கே பழனிச்சாமி முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார். இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்து நிர்மல்குமார் உள்ளிட்டோர் அதிமுக பக்கம் வந்து பதவிகளைப் பெற்றனர். பாஜகவுடன் உரசல் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கியப் பதவிகள் கிடைத்திருப்பது பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி  கொடுத்துள்ள மறைமுக மெசேஜ் ஆக பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்