ஹைதராபாத்: சென்னையிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் இந்து மக்கள் முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் ஏற்பாட்டின் பேரில் பிராமணர்களின் உரிமை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்துக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் பேச்சு குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டுக்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். சென்னையிலிருந்து தலைமறைவான கஸ்தூரி டெல்லியில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் வந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் தனிப்படை போலீஸார், தற்போது கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அங்கு அவர் பதுங்கியிருந்த தகவல் கிடைத்து சென்னை போலீஸார் அங்கு விரைந்து சென்று, ஹைதராபாத் போலீஸாரின் உதவியுடன் கஸ்தூரியைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி விட்டு தெலுங்கு பேசும் மாநிலத்திலேயே போய் கஸ்தூரி பதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}