ஹைதராபாத்: சென்னையிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் இந்து மக்கள் முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் ஏற்பாட்டின் பேரில் பிராமணர்களின் உரிமை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்துக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் பேச்சு குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டுக்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். சென்னையிலிருந்து தலைமறைவான கஸ்தூரி டெல்லியில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் வந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் தனிப்படை போலீஸார், தற்போது கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அங்கு அவர் பதுங்கியிருந்த தகவல் கிடைத்து சென்னை போலீஸார் அங்கு விரைந்து சென்று, ஹைதராபாத் போலீஸாரின் உதவியுடன் கஸ்தூரியைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி விட்டு தெலுங்கு பேசும் மாநிலத்திலேயே போய் கஸ்தூரி பதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}