சென்னையிலிருந்து தலைமறைவாகி.. ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த.. நடிகை கஸ்தூரி கைது

Nov 16, 2024,08:57 PM IST

ஹைதராபாத்: சென்னையிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னையில் சமீபத்தில் இந்து மக்கள் முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் ஏற்பாட்டின் பேரில் பிராமணர்களின் உரிமை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்துக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் பேச்சு குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டுக்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.




முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். சென்னையிலிருந்து தலைமறைவான கஸ்தூரி டெல்லியில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் வந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் தனிப்படை போலீஸார், தற்போது கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அங்கு அவர் பதுங்கியிருந்த தகவல் கிடைத்து சென்னை போலீஸார் அங்கு விரைந்து சென்று, ஹைதராபாத் போலீஸாரின் உதவியுடன் கஸ்தூரியைக் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி விட்டு தெலுங்கு பேசும் மாநிலத்திலேயே போய் கஸ்தூரி பதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்