வாவ்.. மெய் சிலிர்க்க வைத்த தொடை அழகி.. மீண்டும் வரும் அழகிய ரம்பா.. இது இவரது ஸ்டைலா!

Nov 01, 2023,10:53 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: வாவ் என சொல்லக்கூடிய ஸ்டைலான அழகில், அழகே பொறாமைப்படும் அளவிற்கு நேர்த்தியான உடையில் , புன்னகை முகத்துடன் தனது காந்தப் பார்வையால் போஸ் கொடுத்த போட்டோக்களை  ரம்பா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்பா 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். உழவன் என்ற திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.  இதனை அடுத்து உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். இதில் அழகிய லைலா.. இது இவளது ஸ்டைலா.. என்ற பாடலில் பாவாடையை காற்றில் பறக்க விட்டு  அவர் போட்ட ஆட்டத்தை இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாது.

இன்றும் இந்தப் பாடலை  2கே கிட்ஸ் ரசிகர்கள்  பாவாடையை காற்றில் பறக்கவிட்டு ரம்பா போன்று ரீல் செய்து கலாய்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தொடை அழகி என்ற பட்டம்  பெற்றார். இப்படத்தின் மூலம் திரையுலகமே திரும்பிப் பார்க்க வைத்த இவருடைய அழகு நடிப்பு ,நடனம் ,என அனைவரின் உள்ளத்தையும் அள்ளி சென்று விட்டார்.



இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா, ராசி, நினைத்தான் வந்தாய் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். கமல்,ரஜினி, விஜய், அஜித் ,என முன்னணி கதாநாயகனோடு சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி ,போஜ்புரி என பல மொழிகளில் வாய் அடைத்து போகும் அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறார். 

கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்து முடித்து திரையுலகிற்கு முழுக்கு போட்டு விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று புகழ்பெற்றார். 2010 ஆம் ஆண்டு கன்னட தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பிறகு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன்  உள்ளனர் .மூத்த மகள் லாவண்யாவை பார்த்தால் ரம்பாவின் ஜெராக்ஸ் என்றே தெரிகிறது. தற்போது ரம்பாவுக்கு வயது 49 ஆனாலும் இன்றும் இளமையாக காட்சியளிக்கிறார்.

இந்நிலையில்  தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் .இவரை பின்தொடும் ரசிகர்கள் ஏராளம். எத்தனை வருடங்கள் ஆனாலும்   இளமை மாறாமல் அதே ஸ்டைலான அழகில் உள்ளார் .இவர் மீண்டும் நடிக்க மாட்டாரா என ஏங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது.



ஒரு பேட்டியின்போது ரம்பா கூறுகையில், கேட்ட கேள்விகளுக்கே வலிக்காமல் நெளிவு சுழிவாக பதில் சிரித்தபடி அளித்தார். இப்பவும் உங்களுக்கு பட வாய்ப்பு வருகிறதா.. நீங்கள் தமிழில் சினிமாவில் யாருடன் நடிக்கலேனும் வருத்தம்.. என ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய ரம்பா, என் பெயரை காப்பாற்றும் வகையில் நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன் வாய்ப்பிற்காக போன் போட்டு நச்சரிக்க மாட்டேன் என்றும், நடிகர் விக்ரம் கூட தெலுங்கில் ஒரே படத்தில் வேறு ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் ஜோடியாக நடிக்கவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

news

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு

news

திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

news

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு

news

திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு

news

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு

news

தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா

news

மனுதாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே.. முடிவுக்கு வருகிறதா திமுக தொகுதி பங்கீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்