சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) வழங்கியுள்ள துணைப் பொதுச்செயலாளர் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக.,வில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பதவியை நிராகரித்த எஸ்பி வேலுமணி:
அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் சமீபத்திய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, எஸ்பி வேலுமணிக்கு கட்சியின் 'துணைப் பொதுச்செயலாளர்' பதவியை அண்மையில் வழங்கியிருந்தார். ஆனால், இந்த உயர் பதவியை ஏற்பதற்கு எஸ்பி வேலுமணி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களில், "அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தற்போது வழங்கியுள்ள துணைப் பொதுச்செயலாளர் பதவியை நான் ஏற்கப்போவதில்லை" என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்களுக்காக எடுத்த முடிவு:

தன்னுடைய இந்த முடிவிற்கான காரணத்தையும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார். சுயநலமாக தனக்குக் கிடைக்கும் பதவியை மட்டும் பார்த்துக் கொண்டு, தன்னை நம்பி வந்த நிர்வாகிகளை நடுத்தெருவில் விட முடியாது என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். அவர் கூறுகையில், "என்னை நம்பி ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் என்னுடன் வந்துள்ளனர். அவர்களை அப்படியே நடுவழியில் விட்டுவிட முடியுமா? எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். என்னை நம்பி வந்தவர்களுக்கு மீண்டும் கட்சியில் உரிய பதவியை வழங்க வேண்டும்" என்று இபிஎஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வு என்ன?
கொங்கு மண்டலத்தின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே தனது கரூர் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுக.,வில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்குமிக்கவராக பார்க்கப்படும் எஸ்பி வேலுமணியின் இந்த அதிருப்தியான முடிவு கட்சித் தலைமைக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை நம்பியுள்ள 9 மாவட்டச் செயலாளர்களின் அரசியல் எதிர்காலத்திற்காக, தனக்குக் கிடைத்த துணைப் பொதுச்செயலாளர் பதவியையே எஸ்பி வேலுமணி தியாகம் செய்யத் துணிந்திருப்பது, கட்சிக்குள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. எஸ்பி வேலுமணியின் இந்த அதிரடி முடிவால், அதிமுகவின் கொங்கு மண்டல அரசியலில் அடுத்தடுத்து என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
Short Story: ஏட்டு சுரைக்காய்
சிந்தனைச் சிதறல்.. காயும் கனியும் மட்டும் கருணை அல்ல.. நிழலும் காற்றும் வரமே!
அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு
வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?
காற்றே உன் பெயரைக் கேட்டேன்
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு
{{comments.comment}}