சேலம்: முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டை தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறியதாவது:
திமுக ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல, பெரும்பான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026ல் அதிமுக ஆட்சி அமைத்த பிறகு எந்தெந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால், திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை.

திமுக கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட் கட்சி என்னவாயிற்று .. கூட்டணி புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. அது போல் காங்கிரஸ் இருக்கிறது. திருச்சி வேலுச்சாமி திமுகவினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது, இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அதிமுக அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடந்து தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் 36,000 போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அதிமுக ஆட்சி அனுமதி வழங்கியது. எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவார்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}