கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியில்லை.. ஓபிஎஸ் வழியில் எடப்பாடியும் பல்டி!

Apr 24, 2023,04:14 PM IST
சென்னை : கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என அதிமுக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற்றது. இதில் அதிமுக.,வின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் டி.அன்பரசனும், ஓபிஎஸ் அணி சார்பில் இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் அதிமுக விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு அறிவித்த வேட்பாளரின் வேட்புமனுவை அதிமுக கட்சி வேட்பாளரின் வேட்புமனுவாக கர்நாடக தேர்தல் கமிஷன் ஏற்றது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கர்நாடக தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விளக்கம் அளிக்கும் படி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளுருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.



விளக்கம் அளிக்க ஓபிஎஸ் தரப்பிற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்றால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது கர்நாடக தேர்தல் கமிஷன் சட்டச நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் மட்டுமே அதிமுக வேட்பாளர் என முடிவானது.

இதற்கிடையில் மற்றொரு ட்விஸ்டாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அன்பரசனும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜக மேலிடம் தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் இருந்து விலக அதிமுக முடிவு செய்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்