சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீடு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த தொகுதி பங்கீடு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சிகளை இணைக்கலாமா..? அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது..? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்.. போன்றவை குறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும், ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினர் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று காங்கிரஸுடன் முதல் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.
இதில் புதிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற உள்ளன.
2019 தேர்தலின் போது பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு யாரெல்லாம் புதிதாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுக்களின்போதுதான் அதிமுக கூட்டணி குறித்த ஒரு வடிவம் முழுமையாக கிடைக்கும்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}