2024 லோக்சபா தேர்தல்: அதிமுக தொகுதி பங்கீடு குழு.. முதல் ஆலோசனை கூட்டம்.. யாருக்கு எவ்வளவு?

Jan 29, 2024,06:07 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீடு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த தொகுதி பங்கீடு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சிகளை இணைக்கலாமா..? அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது..? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்.. போன்றவை குறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும், ஆலோசனை கூட்டம்  நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினர் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று காங்கிரஸுடன் முதல் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.




இந்நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.


இதில் புதிய  கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற உள்ளன.


2019 தேர்தலின் போது பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு யாரெல்லாம் புதிதாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுக்களின்போதுதான் அதிமுக கூட்டணி குறித்த ஒரு வடிவம் முழுமையாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்