நல்லா குடிச்சுட்டு.. கால்பந்து வீராங்கனைகளை ஓங்கி பளார் என அறைந்த.. நிர்வாகி.. பரபரப்பு புகார்!

Mar 30, 2024,02:16 PM IST

கோவா: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் தீபக் ஷர்மா, பெண் கால்பந்து வீராங்கனைகள் இருவரை குடிபோதையில் கன்னத்தில் ஓங்கி அடித்து துன்புறுத்தியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது.


இமாச்சல பிரதேச கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் தீபக் சர்மா.  சமீபத்தில் இந்திய  மகளிர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கோவாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். அப்போது தீபக் சர்மா தங்களை உடல் ரீதியாக தாக்கியதாகவும், இதனால் காயமடைந்ததாகவும் பலக் வர்மா மற்றும் ரித்திகா தாக்கூர் ஆகிய இரண்டு கால்பந்து வீராங்கனைகள்  கால்பந்து சம்மேளனத்தில் புகார் அளித்தனர். மேலும் எங்களைத் தாக்கும் போது தீபக் ஷர்மா மது போதையில் இருந்ததாகவும் கூறி இருந்தனர்.




இதுதொடர்பாக கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கோவாவின் மம்புசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீபக் சர்மாவிடம் விசாரணை நடந்து வருகிறது. 


இந்த சம்பவம் குறித்து பாலக் வர்மா கூறுகையில்,  நான் வியாழக்கிழமை இரவு அறையில் முட்டைகளை பொறித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் ரித்திகாவும் உடன் இருந்தார். அப்போது தீபக் சர்மா அங்கு வந்தார். நல்ல குடிபோதையில் இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்தது முதலே வீராங்கனைகள் முன்புதான் குடிப்பார். எப்போதுமே குடிபோதையில்தான் இருப்பார். 


என்னிடமும், ரித்திகாவிடமும் கடுமையாக பேசினார். ஓங்கி எங்களை கன்னத்தில் அறைந்தார். உடல் ரீதியாகவும் தாக்கினார். எனக்கு அழுகையாக வந்தது. அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னால் சரியாக தூங்க முடியவில்லை. மனரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

news

திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

news

Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்