கோவா: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் தீபக் ஷர்மா, பெண் கால்பந்து வீராங்கனைகள் இருவரை குடிபோதையில் கன்னத்தில் ஓங்கி அடித்து துன்புறுத்தியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேச கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் தீபக் சர்மா. சமீபத்தில் இந்திய மகளிர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கோவாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். அப்போது தீபக் சர்மா தங்களை உடல் ரீதியாக தாக்கியதாகவும், இதனால் காயமடைந்ததாகவும் பலக் வர்மா மற்றும் ரித்திகா தாக்கூர் ஆகிய இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கால்பந்து சம்மேளனத்தில் புகார் அளித்தனர். மேலும் எங்களைத் தாக்கும் போது தீபக் ஷர்மா மது போதையில் இருந்ததாகவும் கூறி இருந்தனர்.

இதுதொடர்பாக கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கோவாவின் மம்புசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீபக் சர்மாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாலக் வர்மா கூறுகையில், நான் வியாழக்கிழமை இரவு அறையில் முட்டைகளை பொறித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் ரித்திகாவும் உடன் இருந்தார். அப்போது தீபக் சர்மா அங்கு வந்தார். நல்ல குடிபோதையில் இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்தது முதலே வீராங்கனைகள் முன்புதான் குடிப்பார். எப்போதுமே குடிபோதையில்தான் இருப்பார்.
என்னிடமும், ரித்திகாவிடமும் கடுமையாக பேசினார். ஓங்கி எங்களை கன்னத்தில் அறைந்தார். உடல் ரீதியாகவும் தாக்கினார். எனக்கு அழுகையாக வந்தது. அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னால் சரியாக தூங்க முடியவில்லை. மனரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறினார்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}