கோவா: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் தீபக் ஷர்மா, பெண் கால்பந்து வீராங்கனைகள் இருவரை குடிபோதையில் கன்னத்தில் ஓங்கி அடித்து துன்புறுத்தியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேச கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் தீபக் சர்மா. சமீபத்தில் இந்திய மகளிர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கோவாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். அப்போது தீபக் சர்மா தங்களை உடல் ரீதியாக தாக்கியதாகவும், இதனால் காயமடைந்ததாகவும் பலக் வர்மா மற்றும் ரித்திகா தாக்கூர் ஆகிய இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கால்பந்து சம்மேளனத்தில் புகார் அளித்தனர். மேலும் எங்களைத் தாக்கும் போது தீபக் ஷர்மா மது போதையில் இருந்ததாகவும் கூறி இருந்தனர்.

இதுதொடர்பாக கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கோவாவின் மம்புசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீபக் சர்மாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாலக் வர்மா கூறுகையில், நான் வியாழக்கிழமை இரவு அறையில் முட்டைகளை பொறித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் ரித்திகாவும் உடன் இருந்தார். அப்போது தீபக் சர்மா அங்கு வந்தார். நல்ல குடிபோதையில் இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்தது முதலே வீராங்கனைகள் முன்புதான் குடிப்பார். எப்போதுமே குடிபோதையில்தான் இருப்பார்.
என்னிடமும், ரித்திகாவிடமும் கடுமையாக பேசினார். ஓங்கி எங்களை கன்னத்தில் அறைந்தார். உடல் ரீதியாகவும் தாக்கினார். எனக்கு அழுகையாக வந்தது. அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னால் சரியாக தூங்க முடியவில்லை. மனரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறினார்.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}