டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC )தலைவராக பதவி வகித்து வந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இந்திய பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக ஆறாண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தி அடையும் வரை பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யுபிஎஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய்குமார், முன்னதாக கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரியாகவும், 2019 முதல் 2022 வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Education: தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலைக்கு எப்போதுதான் விமோச்சனமோ?
Short Story: ஐந்து விளக்குகள், ஒரே வீடு!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு
TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்
புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
{{comments.comment}}