டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC )தலைவராக பதவி வகித்து வந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இந்திய பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக ஆறாண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தி அடையும் வரை பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யுபிஎஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய்குமார், முன்னதாக கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரியாகவும், 2019 முதல் 2022 வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}