டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC )தலைவராக பதவி வகித்து வந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இந்திய பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக ஆறாண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தி அடையும் வரை பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யுபிஎஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய்குமார், முன்னதாக கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரியாகவும், 2019 முதல் 2022 வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}