சென்னை: அட்சயதிரிதியையை முன்னிட்டு நகை வாங்க கடைக்கு வந்த மக்களுக்கு காலையிலேயே 2 முறை ஷாக் கிடைத்தது. அதாவது அடுத்தடுத்து 2 முறை நகை விலை உயர்ந்தது.
ஒரே நாளில் அதுவும் காலையிலேயே 2 முறை நகை விலை உயர்ந்தது மக்களை அதிர வைத்தது. ஆனாலும் இன்று ஏதாவது வாங்கியாகணுமே என்று மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தபடிதான் உள்ளனர்.
அட்சிய திரிதியை தினத்தன்று பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். நகை வாங்க முடியாதவர்கள் ஏதாவது பொருள் வாங்குவார்கள். அட்சிய திரிதியை இன்று காலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை மதியம் 2.50 மணி வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நகை, பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம்பெருகும், வளம் பெருகும் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் இன்று மேற்கொள்ளும் காரியங்களும் வெற்றி பெறும் என்று கூறப்படுவதால் மக்கள் இந்தத் தினத்தை முக்கியமாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் நகை விலை இன்று அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து மக்களை அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையில் முதலில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்தது. அதன் பிறகு சில மணி நேரங்களில் மீண்டும் ரூ. 360 உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 53,640 ஆக உள்ளது. கிராம் தங்கம் ரூ. 6705 ஆக உள்ளது. வெள்ளி விலையும் ரூ. 1.30 உயர்ந்து ரூ. 90க்கு விற்பனையாகிறது.
விலை உயர்ந்தாலும் கூட நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு நகைக் கடைகளை முற்றுகையிட்டு விரும்பிய நகைகளை, வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}