அட்சதிரிதியை... நகை விலை .. காலையிலேயே 2 முறை உயர்வு.. கடைக்கு வந்த மக்கள் திகைப்பு!

May 10, 2024,09:22 AM IST

சென்னை: அட்சயதிரிதியையை முன்னிட்டு நகை வாங்க கடைக்கு வந்த மக்களுக்கு காலையிலேயே 2 முறை ஷாக் கிடைத்தது. அதாவது அடுத்தடுத்து 2 முறை நகை விலை உயர்ந்தது.


ஒரே நாளில் அதுவும் காலையிலேயே 2 முறை நகை விலை உயர்ந்தது மக்களை அதிர வைத்தது. ஆனாலும் இன்று ஏதாவது வாங்கியாகணுமே என்று மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தபடிதான் உள்ளனர்.




அட்சிய திரிதியை தினத்தன்று பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். நகை வாங்க முடியாதவர்கள் ஏதாவது பொருள் வாங்குவார்கள். அட்சிய திரிதியை இன்று காலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை மதியம் 2.50 மணி வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நகை, பொருள் வாங்கினால்  வீட்டில் செல்வம்பெருகும், வளம் பெருகும் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் இன்று மேற்கொள்ளும் காரியங்களும் வெற்றி பெறும் என்று கூறப்படுவதால் மக்கள் இந்தத் தினத்தை முக்கியமாக கருதுகிறார்கள்.


இந்த நிலையில் நகை விலை இன்று அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து மக்களை அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையில் முதலில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்தது. அதன் பிறகு சில மணி நேரங்களில் மீண்டும் ரூ. 360 உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 53,640 ஆக உள்ளது. கிராம் தங்கம் ரூ. 6705 ஆக உள்ளது. வெள்ளி விலையும் ரூ. 1.30 உயர்ந்து ரூ. 90க்கு விற்பனையாகிறது.


விலை உயர்ந்தாலும் கூட நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு நகைக் கடைகளை முற்றுகையிட்டு விரும்பிய நகைகளை, வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்