சென்னை: அட்சயதிரிதியையை முன்னிட்டு நகை வாங்க கடைக்கு வந்த மக்களுக்கு காலையிலேயே 2 முறை ஷாக் கிடைத்தது. அதாவது அடுத்தடுத்து 2 முறை நகை விலை உயர்ந்தது.
ஒரே நாளில் அதுவும் காலையிலேயே 2 முறை நகை விலை உயர்ந்தது மக்களை அதிர வைத்தது. ஆனாலும் இன்று ஏதாவது வாங்கியாகணுமே என்று மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தபடிதான் உள்ளனர்.

அட்சிய திரிதியை தினத்தன்று பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். நகை வாங்க முடியாதவர்கள் ஏதாவது பொருள் வாங்குவார்கள். அட்சிய திரிதியை இன்று காலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை மதியம் 2.50 மணி வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நகை, பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம்பெருகும், வளம் பெருகும் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் இன்று மேற்கொள்ளும் காரியங்களும் வெற்றி பெறும் என்று கூறப்படுவதால் மக்கள் இந்தத் தினத்தை முக்கியமாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் நகை விலை இன்று அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து மக்களை அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையில் முதலில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்தது. அதன் பிறகு சில மணி நேரங்களில் மீண்டும் ரூ. 360 உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 53,640 ஆக உள்ளது. கிராம் தங்கம் ரூ. 6705 ஆக உள்ளது. வெள்ளி விலையும் ரூ. 1.30 உயர்ந்து ரூ. 90க்கு விற்பனையாகிறது.
விலை உயர்ந்தாலும் கூட நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு நகைக் கடைகளை முற்றுகையிட்டு விரும்பிய நகைகளை, வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}