இதெல்லாம் ரொம்ப ஓவரு.. ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்த தங்கம்.. கன்னத்தில் கைவைத்த பெண்கள்!

May 10, 2024,05:22 PM IST

சென்னை: அட்சயதிருதியை எதிரொலியாக இன்று மக்கள் பெருமளவில் தங்கம் வாங்க குவிந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரே நாளில் 3வது முறையாக விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்ந்தினாலும், நகை கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. 


இன்றைய அட்சய திருதியை யாராலும் மறக்க முடியாது. ஏன் தெரியுமா? வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 3 முறை நகை விலை உயர்ந்துள்ளது. காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் மாலையில் மாற்றம் இருக்காது என்று நினைத்த நிலையில், மாலையிலும் நகை விலை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.360 என இரண்டு முறை  ரூ.720 உயர்ந்த தங்கம், மாலையிலும்  ரூ.520 உயர்ந்துள்ளது.




அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று  நினைத்த மக்கள் முன்டியடித்துக்கொண்டு நகை நடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். காலை 6 மணி முதல் நகை கடைகளும் திறந்திருந்த நிலையில், நகை வாங்குபவர்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் பரவலாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இன்று நகை விலை 3 முறை உயர்ந்துள்ளது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது காலையில் இருந்த விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்