இதெல்லாம் ரொம்ப ஓவரு.. ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்த தங்கம்.. கன்னத்தில் கைவைத்த பெண்கள்!

May 10, 2024,05:22 PM IST

சென்னை: அட்சயதிருதியை எதிரொலியாக இன்று மக்கள் பெருமளவில் தங்கம் வாங்க குவிந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரே நாளில் 3வது முறையாக விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்ந்தினாலும், நகை கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. 


இன்றைய அட்சய திருதியை யாராலும் மறக்க முடியாது. ஏன் தெரியுமா? வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 3 முறை நகை விலை உயர்ந்துள்ளது. காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் மாலையில் மாற்றம் இருக்காது என்று நினைத்த நிலையில், மாலையிலும் நகை விலை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.360 என இரண்டு முறை  ரூ.720 உயர்ந்த தங்கம், மாலையிலும்  ரூ.520 உயர்ந்துள்ளது.




அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று  நினைத்த மக்கள் முன்டியடித்துக்கொண்டு நகை நடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். காலை 6 மணி முதல் நகை கடைகளும் திறந்திருந்த நிலையில், நகை வாங்குபவர்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் பரவலாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இன்று நகை விலை 3 முறை உயர்ந்துள்ளது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது காலையில் இருந்த விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்